Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் நிலத்துக்கோ, நீருக்கோ பாதிப்பில்லை திட்ட செயலாளர் விளக்கம்

Print PDF

தினகரன் 30.07.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் நிலத்துக்கோ, நீருக்கோ பாதிப்பில்லை திட்ட செயலாளர் விளக்கம்

சென்னிமலை, ஜூலை 30:தொழிற்சாலை கழிவுகளை சேகரித்து வைக்கும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை யில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சென்னிமலை, ஜூலை 30:தொழிற்சாலை

கழிவுகளை சேகரித்து வைக்கும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை யில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண் மை திட்டத்தின் செயலாளர் ராமதாஸ் கூறியதாவது:

தொழிற்சாலைகளுக்கு வரும் இன்னல் விளைவிக்கக்கூடிய கழிவுகளை சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் இத்தகைய திடக்கழிவு மேலாண்மை திட்டம் இந்தியா முழுவதும் அமைத்து இயங்கி வருகிறது. இது தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை குழுவு சென்னை மூலம் நிறைவேற்றப்படுகிறது.

இதன் கிளை அலுவலகம் ஈரோட்டிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 675 தொழிலகங்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலக கழிவுகள் சென்னையில் உள்ள கும்மிடிபூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அறிவியில் முறையில் அப்புறப்படுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்துச் செலவும் மற்ற அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தமிழக அரசு தொழிற்காலை வளர்ச்சிக்கு ஏற்ப பல இடங்களில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கேற்ப ஈரோட்டில் இத்திட்டடம் ஒன்றை செயலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு அப்புறப்படுத்தப்படும் கழிவுகள் எரிக்கப்படப்போவதில்லை. பெருந்துறை சிப்காட் பகுதியில் சுமார் 20.2 ஹெக்டேர் நிலத்தில் இத்திட்டம் அமைய உள்ளது. இதில் 30 சதவீத இடம் பசுமைக்கும் 15 முதல் 20 சதவீதம் சாலை மற்றும் கட்டமைப்பு பகுதிக்காகவும் மீதி இடத்தில் ஐஐடி சென்னை வடிவமைத்து ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டப்படி நிலப்பரப்புகள் செயல்படுத்தப்படும். இதனை அவ்வப்போது ஐஐடி கண்காணித்து ஒப்புதலின்பேரில் நிலத்தடி நீர் பாதிக்காதபடி சிபிசிபி ன் பரிந்துரைபேரில் கட்டப்படும். சுற்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அந்த தண்ணீரின் தன்மையை ஐஐடி கண்காணிக்கும். மாதத்துக்கு சுமார் 380 டன் கழிவுகள் இங்கு அப்புறப்படுத்தப்பட உள்ளது. அதனை சுற்றி அழகிய பூங்காவும் அமைக்கப்படும்.

இது போன்ற அமைப்புகள் இந்தியாவில் பல இடங்களில் தற்போது செயல்படுகின்றன. இதனால் விவசாயிகளே பொதுமக்களோ அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.