தினகரன் 03.08.2010
ஆண்டுதோறும் 50 ஆயிரம் டன் சேருகிறது எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்ட 5 இடங்கள் தேர்வு
மும்பை,ஆக.3: மும்பையில் வெளியாகும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டுவதற்கு தலோஜா உட்பட ஐந்து இடங்களை மும்பை பெரு நகர வளர்ச்சி ஆணையம் தேர்வு செய்துள்ளது.
மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் டன் எலட்க்ரானிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அவை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டிவி, கம்ப் யூட்டர், பிரிண்டர் உள் ளிட்ட எலக்ட்ரானிக் பொருள் கழிவுகள் சில வற்றில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயான பொருட்கள் கலந்திருக் கின்றன. எனவே அவற்றை பாதுகாப்பான முறையில் பிரித்தெடுத்து அப்புறப்படுத்த எம்.எம்.ஆர்.டி.ஏ.முடிவு செய்துள் ளது.
இதற்காக தலோஜா மற்றும் வசாய் போன்ற பகு தியில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு அங்கு எலட்க்ரானிக் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு பித்தளை போன்ற உலோ கங்கள் பிரித்தெடுக்கப்படும். பின்னர் கழிவுகள் தாழ்வான பகுதிகளை நிரப்ப பயன்படுத்தப்படும் என்று எம்.எம்.ஆர்.டி.ஏ தெரி வித்து இருக்கிறது.இத் திட்டத்தை தனியார் ஒத்துழைப்புடன் நிறை வேற்ற முடிவு செய்யப்பட் டுள்ளது.
இது தவிர தலோ ஜாவில் 107 ஹெக்டேர் நிலப்பரப்பில் குப்பைகளை அறிவியல் முறையில் சுத்திரிகரிக்கும் திட்டத் தையும் செயல்படுத்த மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் முடிவு செய் துள்ளது. இங்கு 7 மாநக ராட்சியில் வெளியாகும் குப்பைகள் கொண்டு வரப் பட்டு சுத்கரிக்கப்படு கிறது.