Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு திட்டம் குறித்து கருத்து கேட்பு

Print PDF

தினமலர் 20.09.2010

திடக்கழிவு திட்டம் குறித்து கருத்து கேட்பு

அம்பத்தூர்:திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து, பொது மக்களிடம் நாளை திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் கருத்து கேட்கிறார்.தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூத்தம்பாக்கம் பகுதியில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்பகுதி மக்கள் இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், ஐகோர்ட் இத்திட்டம் குறித்து கருத்து கேட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள ராணி திருமண மண்டபத்தில், நாளை காலை 10 மணி முதல் பொது மக்களிடம் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜன் ஆகியோர்,பொது மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.