Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணிகளுக்கு புதிய வாகனங்கள்

Print PDF
தினமணி           22.03.2013

துப்புரவு பணிகளுக்கு புதிய வாகனங்கள்


ராசிபுரம் நகரில் உள்ள 28 வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்க துப்புரவுப் பணியாளர்கள் பயன்பாட்டிற்கு 40 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.  இதனை ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் துப்புரவு பணியாளர்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார். ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.8.19 லட்சம் மதிப்பில் தலா 4 பெட்டிகள் அடங்கிய 40 குப்பை சேகரிக்கும் வாகனங்களை புதியதாக வாங்க நகர்மன்றம் முடிவு செய்தது.  மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து சேகரிக்கும் வகையில் ஒவ்வொரு வாகனத்திலும் 4 பெட்டிகளுடன் கூடிய இந்த வாகனங்களை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதற்கான நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கே.கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், உதவிப் பொறியாளர் கே.செல்வம், துப்புரவு ஆய்வாளர் கே.பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.கந்தசாமி, ஆர்.பி. சீனிவாசன், மணி, ஏ.பி. அருணாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.