தினமணி 29.03.2013
திடக்கழிவு மேலாண்மை: அதிகாரிகள் குழு ஆய்வு
வேட்டவலம் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகளை அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.
மாநில திட்டக்குழு ஆணையத்தின் உயர் மட்டக்குழு திட்ட அலுவலர் செல்வராஜன் தலைமையிலான அதிகாரிகள், வேட்டவலம், அண்ணா நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பேரூராட்சி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரம், மண்புழு உரம், முட்டைத் தூள் உரம், தழை உரம் தயாரிக்கும் முறைகள், மறு சுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களை பிளாஸ்டிக் உடைப்பு இயந்திரம் மூலம் அறைத்து பிளாஸ்டிக் தார் சாலைக்கு பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திடக்கழிவு மேலாண்மை: அதிகாரிகள் குழு ஆய்வு
வேட்டவலம் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகளை அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.
மாநில திட்டக்குழு ஆணையத்தின் உயர் மட்டக்குழு திட்ட அலுவலர் செல்வராஜன் தலைமையிலான அதிகாரிகள், வேட்டவலம், அண்ணா நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பேரூராட்சி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரம், மண்புழு உரம், முட்டைத் தூள் உரம், தழை உரம் தயாரிக்கும் முறைகள், மறு சுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களை பிளாஸ்டிக் உடைப்பு இயந்திரம் மூலம் அறைத்து பிளாஸ்டிக் தார் சாலைக்கு பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.