Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 இடங்களில் கட்டட இடிபாடுகளை கொட்ட மாநகராட்சி அனுமத

Print PDF
தினமணி       10.04.2013

6 இடங்களில் கட்டட இடிபாடுகளை கொட்ட மாநகராட்சி அனுமத


கோவை மாநகராட்சிப் பகுதியில் 6 இடங்களில் கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதற்கு மாநகராட்சி அனுமதித்துள்ளது. வேறு இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் க.லதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சிப் பகுதியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு புதிய குடியிருப்புப் பகுதிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பழைய கட்டடங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய குடியிருப்புகளை உருவாக்குவதன் காரணமாக ஏற்படும் கட்டடக் கழிவுகள் பெரும்பாலும் குளக்கரைகளிலும் சாலையோரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் கொட்டப்படுகின்றன.

இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதுடன் நீரின் தன்மையும் மாசுபடுகிறது. கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்கும் பொருட்டு மாநகராட்சிப் பகுதிகளில் கழிவாகும் கட்டட இடிபாடுகளை சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் கொட்ட வேண்டும். இதை மீறி குளக்கரைகளிலோ சாலையோரங்களிலோ குப்பைத் தொட்டிகளிலோ கட்டடக் கழிவுகளைக் கொட்டினால் உடனடியாக அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

வார்டு எண். 87-இல் பாரதி நகர் கிணறு, 93-இல் மாரியம்மன் கோவில் கிணறு, 97-இல் அன்னை இந்திரா நகர் கிணறு, 100-இல் ரங்கநாதபுரம் கல்லுக்குழி, 8-இல் கவுண்டம்பாளையம் பி அன்ட் டி காலனி, 16-இல் வடவள்ளி மருதாபுரம் நால்வர் நகர் பகுதி ஆகிய 6 இடங்களில் மட்டும் கட்டட இடிபாடுகளைக் கொட்ட வேண்டும்.