Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆர்டிஓ தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Print PDF
தினகரன்       04.06.2013

விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆர்டிஓ தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நெல்லை, : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதை தடுக்க விரைவில் ரூ.55கோடிசெலவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதால் நிகழும் பாதிப்பு மற்றும் பொதுமக்களின் மறியல் சம்பவங்கள் தொடர்பாக நெல்லையில் ஆர்டிஓ பெருமாள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. குப்பை யில் இருந்து மின்சாரம் தயா ரிக்கும் திட்டம் அரசால்அறி விக்கப்பட்டு, ரூ.55 கோடி மதிப்பீட்டில் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட் டத்தை நடைமுறைப்படுத்த அரசு ஒப்பந்தப்புள்ளி பெறுவதற்காக கடந்த மே 2ஆம் தேதி விற்பனை புள்ளிகள் கோரப்பட்டுள் ளன. எனவே அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. பாதாள சாக்கடை கழிவு நீரை கோடகன் கால்வாயில் நேரடியாக திறந்து விடு வதை நிறுத்த வேண்டும்.

ராமையன்பட்டியில் ஈ மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியினை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். குப்பை கிடங்கு பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் உள் ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மோகன், தச்சை மண்டல உதவி செயற்பொறியாளர் சாமு வேல் செல்வ ராஜ், ராமையன்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் மஸ்தான், பாளை ஒன்றிய தேமுதிக பிரமுகர்கள் வெள்ளப்பாண்டி, பால்ராஜ், மதிமுக சிவசங்கர், அன்னை வேளாங்கண்ணி குடி யிருப்போர் நலச்சங்க செய லாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.