Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவீன சமுதாய சமையல் கூடம்

Print PDF

தினமணி               15.06.2013

நவீன சமுதாய சமையல் கூடம்

தாம்பரம் பாரத் நகரில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள, கழிவுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமுதாய சமையல் கூடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி. உடன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகர்மன்றத் தலைவர் கரிகாலன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்.
தாம்பரம் பாரத் நகரில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள, கழிவுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமுதாய சமையல் கூடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி. உடன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகர்மன்றத் தலைவர் கரிகாலன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக, மக்கும் குப்பை மற்றும் கழிப்பிட கழிவு மூலம் உருவாகும் எரிவாயுவை ஏழை,எளிய மக்கள் எவ்வித கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 12 கேஸ் இணைப்புகள் கொண்ட நவீன சமுதாய சமையல் கூடத்தை தாம்பரம் நகராட்சி உருவாக்கி உள்ளது.

இந்த சமுதாய சமையல் கூடத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். ரூ. 25 லட்சம் செலவில் இந்த சமுதாய சமையல் கூடத்தை அமைத்த தாம்பரம் நகராட்சியை அமைச்சர் பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தாம்பரம் நகராட்சி நிர்வாகம் மிகவும் புதுமையான திட்டத்தை ஏழை,மக்கள் பயன் அடையும் வகையில் செயல்படுத்தி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் புதிய சமையல் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த சமுதாய சமையல் கூடத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள "அம்மா' சுயஉதவிக் குழுவினருக்கு அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

கடந்த 2003ல் கிழக்குத் தாம்பரம் பாரத் நகரில் 292 குடிசைகளைக் கொண்ட

குடியிருப்புகளுக்கென ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கழிப்பிட வசதி கொண்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்தது.

இந்தக் கழிப்பிடம் தான் தற்போது நவீன கழிப்பிடமாகவும், சமுதாய சமையல் கூடமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாகக் கழிப்பிட வசதியின்றி சிரமப்பட்ட பாரத் நகர் மக்கள், பராமரிப்பின்றி இருந்த கழிப்பிடத்தை சீரமைத்துத் தருமாறு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர், தாம்பரம் பெருநகராட்சித் தலைவர் எம்.கரிகாலன், ஆணையர் சிவசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளிடம் கழிப்பிடத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கழிப்பிடக் கழிவில் இருந்து உருவாகும் வாயு,மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கும் குப்பை மூலம் உருவாகும் வாயு மூலம் எரிவாயு தயார் செய்ய முடியும் என்பதை சோதனை மூலம் உறுதி செய்த தாம்பரம் நகராட்சி நிர்வாகம், ரூ25 லட்சம் செலவில் ஏழை,எளிய மக்கள்

பயன்படுத்தும் நவீன கழிப்பிடமும், அதன் மூலம் பெறும் எரிவாயுவை கொண்டு சமுதாய சமையல் கூடமும் அமைத்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் முதன் முதலாக கழிப்பிட கழிவு மூலம் செயல்படும் கட்டணமில்லாத சமுதாய சமையல் கூடத்தை உருவாக்கிய நகராட்சி என்ற பெயரை தாம்பரம் நகராட்சி பெற்றுள்ளது.