தினமணி 01.07.2013
ஆலங்காயம் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு
ஆலங்காயம் தேர்வுநிலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் மலையமான் திருமுடிகாரி ஆய்வு செய்தார்.
திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் சார்பில், இங்குள்ள புலுகூர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திடக் கழிவுகள் தரம் பிரித்து வைத்திருப்பதையும், சுகாதார வளாகங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து, சௌர்ண ஜெயந்தி சாகரி ரோஜ்கார் யோஜன திட்டத்தின் சார்பில் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நகர்ப்புற பெண்கள் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி ரூ.1.20 லட்சம் அரசு மானியத்துடன் வங்கிக் கடனை அவர் வழங்கினார்.
மேலும், பயனாளிகள் பங்குத் தொகையில் ரூ.3.50 லட்சத்தில் பாக்கு மட்டையில் தட்டுகள் செய்யும் இயந்திரத்தில் நடைபெறும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
பேரூராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், துணைத் தலைவர் பாண்டியன், செயல் அலுவலர் கோபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.