தினமணி 05.09.2013
தேவகோட்டையில் 200 இடங்களில் குப்பைத்தொட்டிகள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் சுகாதாரத்தை முழு அளவில் பராமரிக்க 200 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன.
நகரில் உள்ள 27 வார்டுகளிலும் தலா 8 குப்பைத் தொட்டிகள் வீதம் வைக்கப்பட்டுள்ளன. இதில் மக்கும், மக்காத குப்பைக்கென தனித்தனியாக தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகர்மன்றத் தலைவி சுமித்ரா ரவிக்குமார் கலந்து கொண்டு தொட்டிகள் வைக்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர் சரவணன், ரவிக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ், கேசவன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.