Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வழக்கமாக 450விழா நாட்களில் 900 டன் குப்பை

Print PDF

தினமலர்          15.10.2013

வழக்கமாக 450விழா நாட்களில் 900 டன் குப்பை

மதுரை : மதுரை மாநகராட்சியில் விரிவாக்கத்திற்கு பின்பு, ஒரு நாளில் தேங்கும் குப்பை அளவு, 450 டன். இதில் மக்காத குப்பை 150 டன். குப்பையை தேக்குவதிலும், சேகரிப்பதிலும், வெளியேற்றுவதிலும் தொய்வு நிலவுகிறது.

மாநகராட்சியை குறைசொல்லும் அதேநேரத்தில், இந்தளவு குப்பை குவிய, மக்களும் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. மாநகராட்சியில் பல கால்வாய்களை, குப்பையால் மூடிய "பெருமை' மதுரை மக்களை சேரும். இன்றும், பல இடங்களில் குப்பைத் தொட்டியை விட, அதைச் சுற்றி சிதறியுள்ள குப்பை டன் கணக்கில் இருக்கும்.தீபாவளிக்கு அடுத்து, ஆயுத பூஜையின் போது, மதுரையில் அதிக குப்பை தேங்குகிறது. வழக்கத்தை விட, இரு மடங்கு அதிகரிக்கும் குப்பையை அகற்ற, குறைந்தது ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கூடுதல் பணியாளர்களை அமர்த்தினாலும், பணியை இரட்டிப்பாக்கினாலும், இருக்கும் வாகனங்களை வைத்து பார்க்கும் போது, விழாக்கால குப்பையை அகற்றுவது, சாதாரண விஷயம் அல்ல. நேற்று முன்தினம் மதுரையில் தேங்கிய குப்பை அளவு, 900 டன். நேற்று 550 டன். அவற்றை அகற்றும் பணிகள், முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், பணிகள் எப்போது முழுமை பெறும் என்பது, கேள்விக்குறியே. நகரின் சூழலை புரிந்து, நம் பயன்பாட்டை குறைப்பதுடன், வீண் கழிவுகள் கொட்டுவதை தவிர்த்தால், வழக்கமான குப்பை சேகரிக்கும் பணியில், தொய்வு இருக்காது. டன் கணக்கில் குப்பை சேர்ந்து கொண்டிருந்தால், மில்லியன் கணக்கில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகிவிடும் என்பதை, அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.