தினகரன் 02.11.2013
வெளிநாடுகளில் இருப்பது போல பூமிக்கடியில் குப்பை தொட்டி
சென்னை, : சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சியின் 2 ஆண்டு பணிகள் குறித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
வெளிநாடுகளில் பூமிக்கடியில் குப்பை தொட்டி அமைத்து குப்பை அகற்றும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதை போல சென்னை மாநகரிலும் சாலைகளில் குப்பை தொட்டிகள் வைப்பதை தவிர்த்து பூமிக்கடியில் குப்பை தொட்டி அமைத்தால் நல்ல தோற்றம் உருவாகும். இந்த புதிய முறையை செயல்படுத்த தேவையான விவரம் பரிசீலிக்கப்பட்டு உரிய ஒப்புதலுக்கு பின் செயலாக்கப்படும். பத்திரிகைகளில் நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்றார்.
தினகரன் செய்திகளுக்கு நடவடிக்கை
மாநகராட்சி சேவை குறைபாடுகள் குறித்து 2012ல் பத்திரிகைகளில் 2261 செய்திகள் வந்துள்ளன. இதில், 2174 செய்திகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 87 செய்திகள் நடவடிக்கை நிலுவையில் உள்ளது. தினகரன் பத்திரிகையில் 640 செய்திகள் வந்துள்ளன. இதில், 620 செய்திகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.