Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மண்புழு உர அலகு அமைக்க மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 1. 95 கோடி மானியம்

Print PDF

தினமலர் 19.02.2010

மண்புழு உர அலகு அமைக்க மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 1. 95 கோடி மானியம்

திருச்சி : திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மண்புழு உர அலகு அமைத்திட ரூ. ஒரு கோடியே 95 லட்சம் மானிய தொகையை வேளாண் துறை அமைச்சர் வழங்கினார்.திருச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உர அலகு அமைத்திட மானியம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சவுண்டையா தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் நேரு முன்னிலை வகித்தார்.

வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருங்காபுரி ஒன்றியம் கொடும்பப்பட்டியை சேர்ந்த மாணிக்கம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேலு, எண்டபுளியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த கவுதமன், ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த சண்முகம், துறையூர் ஒன்றியம் பொன்னு சங்கம்பட்டியை சேர்ந்த தனபால் ஆகிய ஆறு பேருக்கு தலா ரூ. 32 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை மண் புழு உர அலகு அமைத்திட மானியமாக வழங்கினார்.நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் பொன்னுச்சாமி, துணை இயக்குநர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 19 February 2010 07:35