Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் குப்பைகளை பிரித்து எடுப்பதற்காக வீட்டுக்கு வீடு 2 குப்பை கூடைகள்

Print PDF

மாலை மலர்      02.09.2012

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் குப்பைகளை பிரித்து எடுப்பதற்காக வீட்டுக்கு வீடு 2 குப்பை கூடைகள்

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் குப்பைகளை பிரித்து எடுப்பதற்காக வீட்டுக்கு வீடு 2 குப்பை கூடைகள்

திருச்சி, செப்.2-குப்பை இல்லாத நகரமாக திருச்சியை மாற்றவேண்டும் என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் குப்பைகள் முற்றிலுமாக ஒழிந்த பாடு இல்லை.துப்புரவு பணியாளர் பற்றாக்குறை, குப்பைகளை சேகரிப்பதற்கு போதுமான வாகனங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் பல தெருக்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார கேட்டை ஏற்படுத்துகின்றன.
குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மாநகராட்சி 57-வது வார்டு (உறையூர் பகுதி) அ.தி.மு.க கவுன்சிலர் வனிதா வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்கு தனது சொந்த செலவில் தலா 2 குப்பை கூடைகள் வழங்கி வருகிறார்.

ஒரு குப்பை கூடையில் மக்கும் தன்மை உடைய குப்பைகளையும், இன்னொரு கூடையில் மக்காத தன்மை உடைய பிளாஸ்டிக், கேரி பேக் போன்றவற்றையும் போட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார்.  

 

"குப்பைகளை வகைப் பிரித்து சேகரிப்பதே பிரச்னைக்கானத் தீர்வாகும்'

Print PDF

தினமணி            24.08.2012

"குப்பைகளை வகைப் பிரித்து சேகரிப்பதே பிரச்னைக்கானத் தீர்வாகும்'

பெங்களூர், ஆக.23: குப்பைகளை வகைப் பிரித்து சேகரிப்பதே சுற்றுச்சூழல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆதரவுக் குழுவின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான எஃப்.சல்டான்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பெங்களூர் மாநகராட்சியின் அலட்சியப் போக்கினால் நகரில் குப்பை அள்ளும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. நகரில் சேகரிக்கும் குப்பைகளை மாவள்ளிபுரா பகுதியில் பள்ளம்தோண்டி நிரப்பும் பணியை ராம்கி நிறுவனம் செய்து வந்தது. இதை மூடுவதற்கு கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்ததால், குப்பைக் கொட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது.

இதில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தவறு எதுவுமில்லை. மாறாக, சட்டவிதிகளுக்கு புறம்பாக, சுகாதாரக்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் ராம்கி நிறுவனம் குப்பையைக் கொட்டிவந்துள்ளது.

நகரில் தினமும் சேகரிக்கும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளைக் கொட்டுவதற்கு வழியில்லாததால், சாலையோரங்களில் குப்பைத் தேங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை விளைவித்து வருகிறது. குப்பைகளை அள்ளாததால் பலரின் உடல்நலன் கெட்டுள்ளது. ஏரி, கிணறு, ஊற்று, காற்றும் மாசடைந்துள்ளது. ஒருவாரமாக குப்பைகளை அள்ளாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாக மேயர் மற்றும் ஆணையர் கூறுவதில் அர்த்தமில்லை.

குப்பைகளை அள்ளி, வேறு இடத்தில் கொட்டுவதற்கு வழியில்லாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாகக் கூறுவது சரியில்லை. குப்பைகளை அள்ளுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் பெங்களூர் மாநகராட்சி அலட்சியமாகச் செயல்பட்டதால், பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

குப்பைகளை வகைப்பிரித்து சேகரிக்க வேண்டும். சேகரிக்கும் குப்பையின் 15 சதத்தை மட்டும் மண்ணில் புகைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதை மாநகராட்சி பின்பற்றவில்லை. குப்பைகளை மண்ணில் புதைப்பது பிரச்னைக்குத் தீர்வாகாது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, குப்பைகளில் இருந்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிப்பில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, குப்பையை உலைக் கலனில் எரிக்க வேண்டுமென்றால், அதை வகைப் பிரிக்க வேண்டும். குப்பைகளை வகைப் பிரித்து உயிரிப்பொருள் குப்பையை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதரக் குப்பையை மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம்.இந்த நோக்கில் மாநகராட்சி சிந்தித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றார்.

 

திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கூடைகள் விநியோகம்

Print PDF

தினமணி           23.08.2012

திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கூடைகள் விநியோகம்

திருவள்ளூர், ஆக. 22: திருவள்ளூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு பிளாஸ்டிக் கூடைகளை நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் புதன்கிழமை வழங்கினார்.திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 25 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

பெருகி வரும் குப்பைகளை அகற்றவும், மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கவும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ளிட்ட 8 வார்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி மொத்தம் 2500 வீடுகளுக்கு பச்சை, சிவப்பு என தலா 2 பிளாஸ்டிக் கூடைகள் ரூ.1 லட்சம் செலவில் வழங்கப்படுகிறது. இதற்கான விழா 7-வது வார்டில் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கூடைகளை நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் வழங்கினார். ஆணையர் சரவணகுமார், கவுன்சிலர்கள் ராமதாஸ், கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 35 of 66