Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பை கிடங்கிற்கு கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்

Print PDF

தினமலர்             06.12.2010

குப்பை கிடங்கிற்கு கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்

கம்பம் : கம்பம் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.விரிவாக்க பகுதிகளும் அதிகரித்து வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளுவது, பிரித்தெடுப்பது,குப்பை கிடங்கில் சேர்ப்பது சுகாதார பிரிவினருக்கு சிரமமாக உள்ளது. குப்பைகள் கொட்டுவதற்காக நகராட்சிக்கு ஆங்கூர்பாளையம் ரோட்டில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கிடங்கு நிரம்பி, அவற்றை பராமரிப்பு செய்வதில் கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.மேலும் அந்த இடத்தில் பொது மயானமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு, டிரீட்மெண்ட் பிளான்ட் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே குமுளி ரோட்டில் 4.5 ஏக்கர் நிலம் வாங்கி நவீன குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. அங்கு மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் குப்பைக் கிட்டங்கி அமைக்க இடம் கிடைக்காது என்பதால், இப்போதே இடம் வாங்க நகராட்சி முடிவு செய்துள்ளது. கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்கினால் தான், சேகரமாகும் குப்பைகளை பராமரிக்க முடியும் என்று நகராட்சி கூறுகிறது.அரசு நிர்ணய விலைக்கு இடம் வாங்க முடியாதென்றும், கூடுதலாக விலை நிர்ணயம் செய்து, நகராட்சி பொதுநிதியில் இருந்து வாங்கினால் தான் முடியும் என்றும் கவுன்சிலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் இடம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

 

Last Updated on Tuesday, 07 December 2010 07:41
 

எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Print PDF

தினமலர்             03.12.2010

எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

எட்டயபுரம்:எட்டயபுரம் டவுன் பஞ்., பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திணை செயல்படுத்தும் முறை பற்றிய கருத்தரங்கம் நடந்தது. எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் எக்ஸ்னோரா கிரீன் பம்மல் சென்னை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் எட்டயபுரம் டவுன் பஞ்.,ஐ குப்பையில்லா நகரமாக மாற்றிடவும், தொடர்ந்து நகரினை தூய்மையாகவும், அழகாகவும் பராமரித்திடவும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எட்டயபுரம் டவுன் பஞ்., துணைத்தலைவர் கோவிந்தராஜ பெருமாள் தலைமை வகித்தார். டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி உமர்முகைதீன், தொண்டு நிறுவனம் புராஜக்ட் மேனேஜர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மட்கும் குப்பை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பை ரீவைண்டிங் செய்தும் பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஆரம்பமானது. எட்டயபுரத்தில் இனிமேல் ஆரம்பிக்க கூட்டம் நடந்தது. எட்டயபுரத்தில் 19 சுகாதாரப் பணியாளர்களில் சிலர் மட்டும் சுகாதாரப் பணி செய்வதால் நகரில் சுகாதார கேடு ஏற்பட்டு நகரம் சாக்கடை நகரமாகிறது. மீதி சுகாதார பணியாளர்களை மாற்று பணிக்கு பயன்படுத்துவதால் சுகாதாரப்பணிகள் தொய்வடைகிறது என குரல் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் அமுலுக்கு வந்தால் 60 பேருக்கு வேலை கிடைக்கும். எட்டயபுரத்தில் 7 டன் குப்பை ஒருநாளில் சேர்கிறது என விவாதிக்கப்பட்டு, திட்டம் பற்றி எந்த நடவடிக்கை எடுப்பது என முடிவு பெறாமல் கூட்டம் முடிந்தது. வர்த்தகர் சங்க செயலாளர் அய்யனார், பா.., மாவட்ட செயற்குழு முத்துவேல், காங்., நகர தலைவர் குணசேகரன், திமுக., நகர செயலாளர் பாரதிகணேசன், சிபிஎம் தாலுகா செயலாளர் ரவீந்திரன், சிபிஐ., நகர செயலாளர் குமரன், ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் பேச்சியப்பன், காளிமுத்து, சங்கரநாராயணன், ராமசாமி, கார்த்திகை தேவி, நாராயணவடிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

குழித்துறை நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு

Print PDF

தினகரன்                  15.11.2010

குழித்துறை நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு

மார்த்தாண்டம் நவ.15: குழித் துறை நகராட்சி உரக்கிடங்கு மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் நகரில் சேரும் 3 லாரி குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் உரக்கிடங்கில் மலைபோல் குப்பைகள் குவிந்து காணப் படுகின்றன.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் பல் வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதையடுத்து நகராட்சி சார்பில் உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி கள் செய்யப்பட்டன. எனினும் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தற் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த குப்பை களை தரம் பிரித்து உரம் மற்றும் மின் சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள் ளது. அதன்படி தனியார் நிறுவனத்தின் உதவியோடு குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் இங்கு கொட்டப்படும் குப்பைகள் உலோகபொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மக்கும் குப்பை கள் என 3 ஆக தரம் பிரிக்கப்படுகின்றன. பின்னர் மக்கும் குப்பைகளுடன் சாணம், ஈயம் கலந்து ஏரோமிக் முறையில் காற்றின் உதவியுடன் கழிவு களை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதோ போல் உலோகம் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு அனுப்பிவைக் கப்பட உள் ளன. மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சிமென்ட் ஆலைகளுக்கு ஊடுபொருளாக அனுப்பப்பட உள்ளன.

கோழி போன்ற இறைச்சி கழிவுகளை வேதியியல் முறையை பயன்படுத்தி அவற்றில் இருந்து மின் சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 750 கிலோ கழிவுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந¢த திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது.

இதில் முதற்கட்டமாக தற்போது மக்கும் குப்பை களை உரமாக மாற்றுவதற் காக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சமப் படுத்தி அவற்றின் மீது மண் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இப் பணிகளை நகராட்சி தலை வர் பொன். ஆசைத்தம்பி, மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறு வன இயக்குனர் சந்திரகுமார், கவுன்சிலர் ரத்தின மணி, நக ராட்சி சுகாதார அலுவலர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரியில் உள்ள 4 நக ராட்சி பகுதிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது முதன்முத லாக குழித்துறை நகராட்சி யில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குழித்துறை நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்காக அங்கு குவிந்துள்ள குப்பைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணி நடந்தது.

 


Page 37 of 66