Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதுகை நகர்பகுதியை பராமரிக்க முடிவு

Print PDF

தினமலர்                 04.11.2010

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதுகை நகர்பகுதியை பராமரிக்க முடிவு

புதுக்கோட்டை: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதுகை நகர் பகுதியை பராமரிக்க முடிவு செய்திருப்பதாக புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுஐக நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

 புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் நகர்ப்பகுதிகளை பராமரிப்பதென நகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. எனவே, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டீ ஸ்டால்கள், டிபன் சென்டர்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், கடைகள், வணிக வளாகங்கள் நடத்திவருவோர், இதன்மூலம் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவேண்டும். அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சிக்கான குப்பை என தரம்பிரித்து தனித்தனியே கூடைகளில் போட்டு வைக்கவேண்டும். இவ்வாறு வைக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நகராட்சிப் பணியாளர்கள் நேரடியாக வந்து சேகரித்து செல்வர். இதையும் மீறி குப்பைகள் மற்றும் கழிவுகளை பொது இடங்கள், சாலையோரங்கள் மற்றும் வீதிகளில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த பகுதிகளிலிருந்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கான செலவினை தொடர்புடையவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். நகர்ப்பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குப்பை கழிவு உரம் தயாரிப்பு மண்டல கண்காணிப்பு கமிஷனர் ஆய்வு

Print PDF

தினமலர்                    03.11.2010

குப்பை கழிவு உரம் தயாரிப்பு மண்டல கண்காணிப்பு கமிஷனர் ஆய்வு

கரூர்: குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவில் இருந்து உரம் தயாரிக்கும் முறையை மண்டல கண்காணிப்பு கமிஷனர் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குனர் புரில் நேரில் ஆய்வு செய்தார். குப்பை கழிவுகளை சேகரித்து மக்கவைத்து, அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் முறை, குப்பையை மக்களிடம் பெற்று, உரிய முறையில் மக்கவைத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும், நகராட்சி தலைவர் அமுதவேல் விளக்கினார். நகராட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தை கண்காணிப்பு கமிஷனர் புரில் பாராட்டினார்.

சிந்தலவாடி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கொசூர் மற்றும் ஐந்து பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 72 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், பிள்ளப்பாளையம் மற்றும் 6 பஞ்சாயத்துக்கு உட்பட்ட 53 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டப்பணி செயலாகம், குமாரமங்கலத்தில் "ராஜராஜன் 1000' செம்மை நெல் சாகுபடி குறித்தும் பார்வையிட்டார். கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, குளித்தலை நகராட்சி கமிஷனர் தனலட்சுமி, குளித்தலை ஆர்.டி.., பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 04 November 2010 04:15
 

தமிழகத்தில் ரூ9,295 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்

Print PDF

தினகரன்                  28.10.2010

தமிழகத்தில் ரூ9,295 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்

வேலூர், அக்.28: வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் பசுமைக்கோயில் விருது, இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் மு..ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

பசுமைக்கோயில் விருதை நாராயணி பீடம் இயக்குனர் சுரேஷ்பாபுவும், இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் விருதை அறங்காவலர் சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டனர். சிறந்த சுற்றுச்சூழல் சாதனையாளர் விருதை ஸ்ரீபுரம் எக்ஸ்னோரா தலைவர் மீனாட்சிசுந்தரத்துக்கு சக்தி அம்மா வழங்கினார்.

விழாவில் மு..ஸ்டாலின் பேசியதாவது:

நாராயணி பீடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்க எக்ஸ்னோரா பல்வேறு பணிகளை செய்து வருகிறது. புவி வெப்பமயமாதல் பிரச்னை உலகளாவிய அளவில் உள்ளது. எல்லா இடங்களிலும் உள்ளூர் அளவில் பசுமையை பாதுகாக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் தமிழகத்தில் ரூ.9 ஆயிரத்து 295 கோடி மதிப்பில் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்து வருகிறது.

ஆன்மிகவாதிகள் சமூகத்திற்கு தேவையான நல்ல பணிகளை ஆற்றும்போது அதற்கு உருதுணையாக இருப்போம். சென்னைக்கு குடிநீர் வரும் கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீர்படுத்த அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, அந்த கால்வாயை சாய்பாபா சீரமைத்து தந்தார்.

மாதா அமிர்தானந்தமயி சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோருக்கு வீடுகளை கட்டித் தந்துள்ளார். கோவை ஈஷா ஆன்மிக அமைப்பு அரசுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டு வருகிறது. நாராயணி பீடத்தின் சமுதாய பணிகள் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சக்தி அம்மா அருளுரை வழங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், எக்ஸ்னோரா நிறுவனர் நிர்மல், எம்.பி. அப்துல் ரகுமான், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, சி.ஞானசேகரன், கலெக்டர் செ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எக்ஸ்னோரா தலைவர் சுலோச்சனா ராமசேஷன் வரவேற்று பேசினார். முடிவில் ஸ்ரீபுரம் திடக்கழிவு மேலாண்மை திட்ட கவுரவ ஆலோசகர் ராஜசேகர் நன்றி கூறினார்.

 


Page 39 of 66