Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாடித்தோட்டத்திற்கு இலவசமாக குப்பை உரம்

Print PDF

தினகரன் 30.09.2010

மாடித்தோட்டத்திற்கு இலவசமாக குப்பை உரம்

நாகர்கோவில், செப். 30: மாடித்தோட்டம் திட்டத்திற்கு மக்கும் குப்பைகளை பேக்கிங் செய்து இலவசமாக வழங்க உள்ளதாக நகராட்சி தலைவர் அசோகன் சால மன் தெரிவித்தார்.

குமரியில் பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் வரு கிற ஜனவரி முதல் செயல் படுத்தப்பட உள்ளது. அதற் காக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இத்திட்டத்தின் ஒரு பகுதி யாக மக்கும் குப்பைகளை பயன்படுத்தி வீட்டு மொட்டை மாடிகளில் காய் கறி தோட்டம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தோட்டம் அமைக்க தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் நகராட்சி சார்பில் இத்திட்டத்திற்கு முன்மாதிரியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன் படி ஆர்வமுள்ள கவுன்சிலர்களின் வார்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த சேர்மன் அசோகன்சாலமன், ஆணை யர் ஜானகி ரவீந்திரன் ஆகி யோர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் நகராட்சியில் 14வது வார்டில் முதல் கட்ட மாக 10 வீடு களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்திற்காக வலம்புரிவிளை உரக்கிடங்கிலிருந்து இலவசமாக மக்கும் குப்பைகளை பேக்கிங் செய்து வழங்க நகராட்சி முடிவு செய்துள் ளது. இதுகுறித்து சேர்மன் அசோகன் சாலமன் கூறியதாவது: குமரியில் பிளாஸ்டிக் தடை, நீர் நிலை சுகாதார மேலாண்மை போன்ற மாவட்ட நிர்வாகத்தின் நல்ல திட்டங்களுக்கு நாகர்கோவில் நகராட்சி முழுமை யான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தற்போது பூஜ்யகழிவு மேலாண்மைக்காக மாடித்தோட்டம் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள் ளது. பொதுமக்களின் ஆர் வத்தை தூண்டும் வகையில் அதற்கு இலவசமாக மக்கும் குப்பை உரங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நகர் மன்ற ஒப்புதல் பெற்று வலம்புரிவிளை உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் நன்றாக தரம்பிரிக்கப் பட்டு பேக்கிங் செய்து வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். என்றார்.

அசோகன் சாலமன் தகவல் தோட்டக்கலைத்துறையில் அதிக விசாரிப்பு

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு முதல் நாளே 100க்கும் மேற்பட்டோர் தொலைபேசி மூலம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர்களுக்கு தொலைபேசி மூலம் மட்டுமின்றி நேரிலும் ஆலோசனைகள் வழங்கி வருவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

 

உரம் தயாரிக்க தண்ணீர் விநியோகம்: ரூ.18 லட்சத்தில் கரூர் நகராட்சி திட்டம் தயாரிப்பு

Print PDF

தினமலர் 28.09.2010

உரம் தயாரிக்க தண்ணீர் விநியோகம்: ரூ.18 லட்சத்தில் கரூர் நகராட்சி திட்டம் தயாரிப்பு

கரூர்: கரூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், உரம் தயாரிக்க தேவையான தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், விநியோகம் செய்வதுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர் மற்றும் பல்வேறு நிமித்தமாக வந்து செல்வோர் என நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புழக்கம் உள்ளது. இதனால், 45 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேர்கிறது. குப்பைகள் லாரிகள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, அவ்வப்போது தீவைத்து எரிக்கப்படுகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வந்தது. இதை தவிர்க்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரம் தயாரிக்கும் திட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் இடம் தேர்வு செய்தது. கலவை உரக்கிடங்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. உரம் த யாரிக்கும் கூடம் அமைக்கப்பட் டு அதில் அப்பைகள் கொட்டப்பட்டன.

மக்கும் குப்பைகள் குழிகளில் கொட்டி சாணநீர் தெளிக்கப்பட்டு கிளறிவிடப்படும். கலவை உரம் தயாரிக்க தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இப்பணிக்கு தேவையான தண்ணீரை பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மூலம், சுத்தகரித்த தண்ணீரை குழாய் மூலம் கொண்டு எடுத்து வந்து ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து வைக்கப்படவுள்ளது. இங்கியிருந்து கலவை உரக்கிடங்கிற்குள் பகிர்மான குழாய் மூலம் விநியோகம் செய்ய கரூர் நகராட்சி நிர்வாகம் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்துள்ளது. விரைவில் இப்பணி நிறைவடைந்து உரம் தயாரிப்பு பணி துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கி.புரம் டவுன் பஞ்., கூட்டம் லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து வார்டு பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதி, சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கவுன்சிலர்கள் இளங்கோவன், தர்மர், அம்பிகாவதி, கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

நகராட்சி குப்பை உரக்கிடங்கிற்கு தண்ணீர் விநியோகம் உரம் தயாரிக்கும் பணி விரைவில் துவங்கும் ரூ16 லட்சத்தில் திட்ட மதிப்பீடு

Print PDF

தினகரன் 27.09.2010

நகராட்சி குப்பை உரக்கிடங்கிற்கு தண்ணீர் விநியோகம் உரம் தயாரிக்கும் பணி விரைவில் துவங்கும் ரூ16 லட்சத்தில் திட்ட மதிப்பீடு

கரூர், ஏப்.27: கரூர் நகராட்சியில் குப்பையில் உரம் தயாரிக்கும் உரக்கிடங்கிற்கு தண்ணீர் விநியோகிக்க ரூ.16 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சியின் மக்கள் தொகை சுமார் 70,000. தொழில் நகரமாக விளங்குவதால் நாள்தோறும் நகருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்துசெல்கிறார்கள். நகராட்சியில் உள்ள 36வார்டுகளில் நாள் தோறும் சேரும் 45 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்த மான குப்பை கிடங்கில் போடப்பட்டு வந்தன. அவ்வப்போது இவை தீவைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் தமிழக அரசு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை கொண்டு வந் தது. இதில் கரூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது.

திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தில், இதன்படி கலவை உரக்கிடங்கு ரூ90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு அதில் குப்பைகள் கொட்டப்பட்டன. மக்கும் குப்பைகள் குழிகளில் கொட்டி சாணநீர் தெளிக்கப்பட்டு கிளறி விடப்படும். 75நாள் முதல் 90 நாட்களில் உரம் தயாராகிவிடும்.

உரம் தயாரிக்க ஏதுவாக வின்ட்ரோஸ் அமைக்கப்பட்டுள்ளது. கலவை உரம் தயாரிக்க தண்ணீர் அவசி யம் தேவைப்படுகிறது. இப்பணிக்கு தேவையான தண்ணீரை பாதாள சாக் கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த தண்ணீரை அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கலவை உரக்கிடங்கிற்கு குழாய்கள் மூலம் கொண்டுவந்து 6,000 லிட்டர் கொள் ளவு கொண்ட இருமேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து வைத்து கலவை உரக்கிடங்கிற்குள் பகிர்மான குழாய்கள் மூலம் விநியோகம் செய்ய கரூர்நகராட்சி நிர்வாகம் ரூ16லட்சம்மதிப்பில் திட்டம் தயாரித்துள்ளது.இப்பணிகள் நிறைவுபெற்றதும் உரம் தயாரிக்கும் பணி துவங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 41 of 66