Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பை கொட்ட ஐந்து நகராட்சி பகுதி மக்கள் ஆதரவு

Print PDF
தினமலர்     22.09.2010

குப்பை கொட்ட ஐந்து நகராட்சி பகுதி மக்கள் ஆதரவு

பூந்தமல்லி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில், குத்தம்பாக்கம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, அக்கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஐந்து நகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உட்பட்டோர் ஆதரவு தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தில் அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், திருவேற்காடு மற்றும் வளசரவாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளில் தேங்கும் கழிவுகளை கொட்டி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இதை அக்கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நேற்று பூந்தமல்லியில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது. குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், " இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள பகுதி சற்று மேடானது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் தான் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்கிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் ஏரி நீர் உட்பட நிலத்தடி நீர் பாதிக்கப்படும். பொதுவாக இதுகுறித்து ஓராண்டில் நான்கு பருவ காலங்களிலும் அங்கு ஆய்வு நடத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடவேண்டும்' என்றார். செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் பேசுகையில், "செம்பரம்பாக்கம் ஏரிக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்து வரக்கூடாது. ஏற்கனவே எங்கள் பகுதிக்கு குத்தம்பாக்கத்தில் ஐந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தான் நீர் பெற்று வருகிறோம்' என்றார்.

கூட்டத்தில், குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கருத்துக்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அம்பத்தூர், மதுரவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி மற்றும் வளசரவாக்கம் நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். வில்லிவாக்கம் ரங்கநாதன் எம்.எல்..,வும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். கூட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் பேசுகையில், "பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்கும்' என்றார். கூட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் ராஜன், உதவி பொறியாளர் லிவிங்ஸ்டன் உட்பட திரளான அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 22 September 2010 07:45
 

திடக்கழிவு திட்டம் குறித்து கருத்து கேட்பு

Print PDF

தினமலர் 20.09.2010

திடக்கழிவு திட்டம் குறித்து கருத்து கேட்பு

அம்பத்தூர்:திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து, பொது மக்களிடம் நாளை திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் கருத்து கேட்கிறார்.தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூத்தம்பாக்கம் பகுதியில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்பகுதி மக்கள் இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், ஐகோர்ட் இத்திட்டம் குறித்து கருத்து கேட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, பூந்தமல்லியில் உள்ள ராணி திருமண மண்டபத்தில், நாளை காலை 10 மணி முதல் பொது மக்களிடம் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜன் ஆகியோர்,பொது மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்க்கு திடக்கழிவு மேலாண் பயிற்சி

Print PDF

தினமணி 13.09.2010

ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்க்கு திடக்கழிவு மேலாண் பயிற்சி

ராசிபுரம், செப்.12: ராசிபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, நகராட்சி சுகாதார அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆர்.எஸ்.ரங்கசாமி, ஆணையாளர் கு.தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.

சென்னை எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஜய் ஆனந்த், பெங்களூரு வாட்டர் எய்டு தொண்டு நிறுவன நிர்வாகி, குளித்தலை நகர்மன்றத் தலைவர் அமுதவேல் ஆகியோர், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் நகர சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து எடுத்துக் கூறினர்.

இந்தத் திட்டங்களை ராசிபுரம் நகராட்சியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் குளித்தலை நகராட்சியிலுள்ள எரு பூங்காவை ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் பார்வையிட்டு பயிற்சி பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நகராட்சி ஆணையர் தலைமையில் சுகாதார அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், துப்பரவு பணியாளர்கள் என 38 பேர் குளித்தலை சென்றனர். அங்குள்ள எருப் பூங்காவை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வாங்குவது, பிளாஸ்டிக் குப்பை மறுசுழற்சி, மண்புழு உரமாக மாற்றுவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர்.

 


Page 42 of 66