தினமணி 11.08.2010
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி
திருப்பத்தூர், ஆக. 10: திருப்பத்தூரில் சுகாதார இயக்கமும், பேரூராட்சியும் இணைந்து செவ்வாய்க்கிழமை திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி நடத்தியது.
ஆர்.சி.பாத்திமா பள்ளி முன்பு பேரணி தொடங்கியது. இதில் சுகாதாரத் துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா, துணைத் தலைவர் ஆர்.கார்த்திகேயன், செயல் அலுவலர் அமானுல்லா, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், கவுன்சிலர்கள் முருகானந்தம், கவிதாகுமார், சரவணப்பெருமாள், துப்புரவு மேற்பார்வையாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணா சிலையை அடைந்தது. அங்கு சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா பேசினார். சுகாதாரத் துறை ஆய்வாளர் சகாயஜெரால்டுராஜ் நன்றி கூறினார்