Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குளித்தலை நகராட்சி உரக்கிடங்கில் கர்நாடகா குழுவினர் ஆய்வு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து கேட்டறிந்தனர்

Print PDF

தினகரன்   20.07.2010

குளித்தலை நகராட்சி உரக்கிடங்கில் கர்நாடகா குழுவினர் ஆய்வு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து கேட்டறிந்தனர்

குளித்தலை, ஜூலை 20: குளித்தலை நகராட்சி உரக்கிடங்கில் செயல்படுத்தப்படும் மண்புழு உரம் தயா ரிப்பு பணியினை கர்நாடக மாநில குழுவினர் ஆய்வு செய்தனர்.

குளித்தலை நகராட்சி யில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் நாளொன்றுக்கு 8 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணியில் 26 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை வை.புதூரில் உள்ள நகராட்சிக்கு சொந் தமான ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று மண் புழு உரம் தயாரித்து வருகின்றனர். இதுவரை நக ராட்சி சார்பில் ரூ.60,000 மதிப்பில் மண்புழு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேம்பாட்டு திட்டம் மூலம் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் சுவப்னா தலைமை யில் நேற்று முன்தினம் குளித்தலை வந்தனர். இந்த குழுவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நகராட்சி ஆணையர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், சுகாதார அலுவலர் கள், ஆய்வாளர்கள், நகரா ட்சி பொறியாளர்கள் ஆகி யோர் வந்திருந்தனர். இவர் களை நகர்மன்ற தலைவர் அமுதவேல், ஆணையர் (பொ) தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் குளித்தலை அருகே வை.புதூரில் உள்ள உரக்கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுவப்னா கூறுகையில், தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. நாங்கள், இதுவரை நாமக்கல், திருச்சி, முசிறி போன்ற இடங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை ஆய்வு செய்தோம்.

இதில் மண்புழு உரம் தயாரிப்பது எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயற்கை உரமான இந்த மண்புழு உரத்தை தயாரிப்பது குறித்து இங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தோம். இதே திட்டத்தை கர்நாடகாவில் முதலில் 2 நகராட்சிகளை தேர்வு செய்து அவற்றில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.

 

தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆட்கள் பற்றாக்குறையால் பாதிப்பு

Print PDF

தினகரன் 28.06.2010

தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆட்கள் பற்றாக்குறையால் பாதிப்பு

தாராபுரம், ஜூன் 28:தாராபுரம் நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கப்பட்டது. 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த சிறிய நடுத்தர நகரத்தில், 30 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங் கள், உணவு விடுதிகள் மற் றும் அலுவலகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்பட்டு, குடியிருப்புகளுக்கு வெளியே 10.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட உரக்கிடங்கில் சேகரிக்கப்பட்டது. அங்கு, உயிர் உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. சராசரியாக நாளொன்றுக்கு 5 டன் மக்கும் குப்பை பிரித்தெடுக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்பட்டது.

தாராபுரம் நகராட்சியில் ஏரோபிக் முறையில் சிறிய அளவில் மண்புழுக்கள் மூலமாகவும், பெரிய அளவில் விண்ரோஸ் முறையிலும் தயாரிக்க திட்டமிட்டு, அதற்காக உரக்கிடங்கில் 2400 சதுர மீட்டர் பரப்பளவில் கான்கிரீட் தளம் வடிகால் வசதியுடன் அமைக்கப்பட்டது. இத் திட்டம் முழுக்க, முழுக்க ஆட்களை கொண்டுதான் செயல்படுத்த முடியும். ரசாயன உரங்களில் நைட் ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன. இந்த உரத்தில் கூடுதலாக அயர்ன், மாங் கனீசு, காப்பர், கால்சியம், சல்பர் போன்ற சத்துகள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

டன் ஒன்றுக்கு 50 ரூபாய் மட்டுமே பெறப்பட்டு, இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக திட்டம் முழுமையாக செயல்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கிறது. போதுமான வசதிகள், தேவையான நிதி ஆதாரங்கள் இருந்தும் இந்த திட்டம் முடங்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலமாக ஆட்களை நியமித்தும் அல்லது ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் உள்ள உறுப்பினர்களைக் கொண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றினால் பல வகையில் பயன்பெற முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை

Print PDF

தினமலர் 28.06.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை

சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்தவும், நகரை தூய்மைப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னாளபட்டியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் சமீபத்தில் உருவான விரிவாக்க பகுதிகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை வசதிகள் முறையாக அமைக் கப்படவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கும் முறை கைவிடப்பட்டு பல ஆண்டுகளாகிறது.இதற்க பதிலாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுதோறும் சென்று வண்டிகளில் குப்பை சேகரிக்கும் முறை அமலில் உள்ளது. ஆயினும் இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் குறிப்பிட்ட சில தெருக்களின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. குப்பை அள்ளும் டிராக்டர் வந்து இவற்றை அள்ளி செல்லும் வரை காற்றில் பறந்து மீண்டும் தெருக்களில் இறைந்து கிடக்கின்றன.

தற்போது துப்புரவு பணியாளர் எண்ணிக்கை பற்றாக்குறையால், நகரின் குறிப்பிட்ட முக்கிய வீதிகளில் மட்டும் அன்றாடம் துப்புர பணிகள் நடக்கின் றன. இதர தெருக்களில் சுழற்சிமுறையில் பல நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகள் அள்ளப்படுகின்றன. கழிவுநீர் சாக்கடைகள் மாதக்கணக்கில் அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. இவற்றில் இருந்து கிளம் பும் துர்நாற்றம் மற்றும் நோய் கிருமிகளால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளா கியுள்ளனர். திடக்கழிவு மேலாண் மை திட்டத்தை மேம்படுத்தவும், நகரை தூய்மைபடுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 


Page 47 of 66