Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

கட்டடக் கழிவுகளை குளக்கரைகளில் கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து

Print PDF

தினமணி    21.05.2010

கட்டடக் கழிவுகளை குளக்கரைகளில் கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து

கோவை, மே 20: குளக்கரைகளில் கட்டடக் கழிவுகளை கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

÷ மாநகர சுற்றுச்சூழல் குழுக் கூட்டம், மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையர் வே.சாந்தா முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மாநகராட்சி பகுதியில் இயங்கும் வணிக நிறுவனங்கள் தங்களிடம் இருந்து வெளியாகும் கழிவுகளை தெருக்களிலோ அல்லது சாக்கடைகளிலோ கொட்டக் கூடாது. மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து அனுப்ப வேண்டும்.

திருமண மண்டபங்களில் வெளியாகும் கழிவுகளையும் இதேபோல தரம் பிரித்து அனுப்ப வேண்டும். இது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி சாலையோரங்களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் மரக்கன்றுகளை நடுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கோவை நகரில் பள்ளிகள், சாலையோரங்களில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள குளக்கரைகளில் கட்டடக் கழிவுகளை கொட்டும் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பிரான்ஸ் மாணவிகள் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 13.04.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பிரான்ஸ் மாணவிகள் நேரில் ஆய்வு

குளித்தலை: குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மையை பிரான்ஸைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் நேரில் பார்வையிட்டு தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர். குளித்தலை நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சத்தியமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டு, நகராட்சியில் சேரும் குப்பையை தரம் பிரித்து துப்புரவு பணியாளர் மூலம் இயற்கை உரம் தரம் பிரிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் பெறப்பட்ட குப்பை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குளித்தலை நகராட்சியில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படுவதை இயற்கை விவசாயிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முன்மாதிரியாக கொண்டு பார்வையிடுகின்றனர். மேலும், மாநிலத்தில் பல்வேறு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் செயல்முறைகளை குறித்து நகராட்சி தலைவர் அமுதவேல், கமிஷனர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் நேரில் செயல்முறை விளக்கம் அளித்துவருகின்றனர். சிறப்பாக செயல்படும் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கழிவு மற்றும் உரங்களை தஞ்சாவூர் சாஸ்தா பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் நேரில் பார்த்து தொழில்நுட்பம் கையேடுகளை பெற்றுச் சென்றனர். இன்டர்நெட் மூலம் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்த்த இயற்கை விஞ்ஞானிகள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவிகள் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டு, செயல்முறைவிளக்கம், தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.

Last Updated on Tuesday, 13 April 2010 06:22
 

திடக்கழிவு உரத்தில் காலிபிளவர்! கலக்குது கூடலூர் பேரூராட்சி

Print PDF

தினமலர் 13.04.2010

திடக்கழிவு உரத்தில் காலிபிளவர்! கலக்குது கூடலூர் பேரூராட்சி

பெ.நா.பாளையம் : திடக்கழிவில் தயாரிக்கப் பட்ட கலவை உரத்தை பயன்படுத்தி காலிபிளவர் உற்பத்தி செய்யும் பணி, கூடலூர் பேரூராட்சியில் துவங்கியது. இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து மாதம் தோறும் ஏழு 'டன்' குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை மட்கும், மட்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மட்காத குப்பைகளை 'பிளாஸ் டிக்' பைகளில் அடைத்து மறுசுழச்சி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 'கம்போஸ்ட்' பூங்காவிலிருந்து மாதம் ஒன்றுக்கு மூன்று டன் இயற்கை உரம், மண்புழு உரம், 'பஞ்சகாவ்யா' தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கும், தனியாருக்கும் விற் பனை செய்யப்படுகிறது. தவிர கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுக்கு பின்புறம் சமையல் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் முறையும் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினரை கொண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்யும் பணி கடந்த ஆண்டில் துவங்கியது. சில மாதங்களுக்கு முன் கலவை உரம், வைக்கோல் ஆகியவற்றை கொண்டு காளான் உற்பத்தி நடந்தது. தற்போது, காலிபிளவர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காலிபிளவர் விற்பனையை கூடலூர் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர். படிப்படியாக அனைத்து வகையான காய்கறிகளையும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

Last Updated on Tuesday, 13 April 2010 06:20
 


Page 51 of 66