Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: இயந்திரம் பயன்படுத்த பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர் 02.02.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: இயந்திரம் பயன்படுத்த பேரூராட்சி முடிவு

சோழிங்கநல்லூர்: சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் மாவட்டத் திலேயே முதல் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை சேகரிக்கும் பணியில் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

சோழிங்கநல்லூர் பேரூராட்சி 15 வார்டுகளையும், 30 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்டது. தினசரி 10 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் "ஹாண்ட் இன் ஹாண்ட்' தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. குப்பை சேகரிக்கும் பணியில் 56 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினசரி மூன்று சக்கர சைக்கிளில் ஒவ்வொரு பகுதியாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். பின், திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகின்றன.

மக்காத குப்பைகள் கைவேலி பகுதியில் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பைகள் 38 தொட்டிகளில் கொட்டி உரம் தயாரிக்கப்படுகிறது. 20 தொட்டிகளில் மண்புழு உரமும், 18 தொட்டிகளில் மக்கும் உரமும் தயாரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை கிடங்கை சுற்றி, ஏற்கனவே நடப்பட்டிருந்த செடிகள் அகற்றப் பட்டு, புதியதாக கத்திரி, தக்காளி, வெண்டை, கீரைகள் ஆகிய செடிகள் நடப்படவுள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் நவீனப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட் டத் திலேயே முதல் முறையாக உரம் தயாரிப்பதற்கு குப்பை கழிவுகளை எருவாக்கும் இயந் திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து பேரூராட்சி தலைவர் அரவிந்த் ரமேஷ் கூறுகையில்,"மக்கும் குப்பைகளை தொட்டியில் கொட்டி உரமாக்குவதற்கு 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, குறைந்த நாட்களில் உரம் தயாரிப்பதற்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தின் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இதன் மூலம் தினசரி ஒன்றரை டன் குப்பைகள் அரைக்கப்படும். இதனால், 20 நாட்களிலேயே உரம் தயாராகிவிடும். மேலும், பேரூராட்சியில் மூன்று கோடி ரூபாய் செலவில் நவீன திருமண மண்டபமும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:13
 

குப்பையிலிருந்து செல்வம் திட்டம் துவக்கம்

Print PDF

தினமணி 10.01.2010

குப்பையிலிருந்து செல்வம் திட்டம் துவக்கம்

பெ.நா.பாளையம், ஜன. 9: தனியார் நிறுவனப் பங்களிப்புடன் சுகாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் குப்பையிலிருந்து செல்வம் என்ற திட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக தேக்கம்பட்டியிலுள்ள ஐடிசி என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத் திட்டத்தை பேரூராட்சி நடைமுறைப்படுத்துகிறது. இதன்படி இந்நிறுவனமானது பொதுமக்களிடம் மக்கும் குப்பைகளை கிலோவிற்கு ரூ.2 என்ற வீதத்தில் பெற்றுக் கொள்கிறது.

குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பை தரப்படுகிறது. இதில் அவர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதப் பைகள்,சோப்புகவர்,பிஸ்கட் கவர்,டூத் பிரஸ்,பாலீதீன் பைகள்.தண்ணீர் பாட்டில்கள் போன்ற பல பொருட்களை சேமிக்க வேண்டும்அதனை 10 நாட்களுக்கு ஒருமுறை இந்நிறுவனத்தில் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையையும் வழங்குவர்.

இதனை, வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேருராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிளாஸ்டிக் பைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் செüந்திரம், கவுன்சிலர்கள் சிவராஜ்,முருகேசன்,திலகா ரகுநாதன்,கோவிந்தராஜ்,சுகாதார நல அதிகாரி பரமசிவம் மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பொருட்கள் துறை மேலாளர் பெரோஸ் முன்ஷி உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து அருண்குமார் கூறியது: இங்கு 18 வார்டுகளிலும் சேர்த்து தினமும் 3டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இதில் 30 சதவீதம் மக்கும் குப்பை உள்ளது.இதனை ஐடிசி நிறுவனம் பெற்றுக்

கொள்கிறது. முதற்கட்டமாக 2500 வீடுகளில் இது நடைமுறைபடுத்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டு கட்டமாக இன்னும் 7500 குடும்பங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்குவது குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

 

குப்பையில் இருந்து மின்சாரம்: திட்டம் செயல்படுத்துவதற்கான இடம் குறித்து அமெரிக்க பேராசிரியர் ஆய்வு

Print PDF

தினமணி 07.01.2010

குப்பையில் இருந்து மின்சாரம்: திட்டம் செயல்படுத்துவதற்கான இடம் குறித்து அமெரிக்க பேராசிரியர் ஆய்வு

திருப்பூர், ஜன.6: சுமார் ரூ.1,400 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான இடம் குறித்து அமெரிக்க பல்கலை. பேராசிரியர்கள் புதன்கிழமை திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

÷உலக வங்கி நிதியுதவி 90 சதவீதம் மற்றும் தனியார் பங்களிப்பு 10 சதவீதத்துடன் திருப்பூரில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஏல் பல்கலை. பேராசியர்கள் சார்லஸ் ஏலென் ஜோன், சீனிவாசன் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினருக்கு விரிவான விளக்கம் அளித்தனர்.

÷அதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் குறித்தும், திட்டத்துக்கு தேவையான இடம், குப்பைகள் உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி மேயர் க.செல்வராஜ், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி ஆகியோரிடம் விரிவாக அறிவுறுத்தப்பட்டது. இவற்றை கேட்டறிந்த மாநகராட்சி நிர்வாகத்

தினர் இத் திட்டத்துக்கான நிலமும், குப்பைகளும் அளிப்பதாக உறுதியளித்தனர்.

÷இதையடுத்து, திருப்பூரில் நாளொன்றுக்கு கிடைக்கும் குப்பைகள், திட்டக் கூடம் அமைய உள்ள இடத்துக்கும் கழிவுநீர் கிடைக்கும் இடத்துக்கும் உள்ள தூரம் உள்ளிட்டவை குறித்து ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தயாரித்து அளிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஆய்வுக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

÷இதைத் தொடர்ந்து திட்டத்துக்கு தேவையான இடம் குறித்து இடுவாய், இடுவம்பாளையம், கோயில்வழி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அருள்புரம், கரைப்புதூர் சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையங்களையும், கோயில் வழி திடக்கழிவு உரத் தொழிற்சாலையையும் பார்வையிட்டனர். இதன் தொடர்ச்சியாக, திட்டத்துக்கான முதல் கட்ட உதவி கோரி மும்பையில் உள்ள இந்திய பைனான்ஸ் கார்ப்ரேசன், தமிழ்நாடு பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனங்களுடன் வியாழக்கிழமை பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

÷திருப்பூரில் நடந்த ஆய்வின் போது மாநகராட்சி நகர்நல அதிகாரி கே.ஆர்.ஜவஹர்லால், முயற்சி மக்கள் அமைப்பு நிர்வாகிகள் சிதம்பரம், பரமசிவம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:39
 


Page 55 of 66