Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி இடங்கள் ஆய்வு

Print PDF

தினமலர் 07.01.2010

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி இடங்கள் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் பகுதியில் சேகரமாகும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவன விஞ்ஞானிகள் குழுவினர், நேற்றுமேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இத்திட்டத் திற்காக மாநகராட்சிக்கு சொந்தமான மூன்று இடங்களை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். திருப்பூரில், சாலை ஆலைகளிலிருந்து தினமும் வெளியேற்றப்படும் 11 கோடி லிட்டர் சாயக் கழிவு நீரால் ஏற்படும் பிரச்னையும், தினமும் வீதிகளில் கொட்டப்படும் 450 டன்னுக் கும் கூடுதலான குப்பையும் பூதாகரமான பிரச்னையாக உள்ளது. இந்த இரண்டு விதமான பிரச்னைக்கும் தீர்வுகாணும் வகையில், அமெரிக் காவை சேர்ந்த தனியார் நிறுவனம், 1,428 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்துள்ளது.

அது தொடர்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தில் நேற்று முன்தினம் அத்திட்டம் குறித்த செயல்விளக்க கூட்டம் நடந்தது.இத்திட்டத்தை தயாரித்துள்ள அமெரிக்க டெக்ஸாஸ் ஏ.எம்., பல்கலை பேராசியர்கள் சீனிவாசன், ஆலன்ஜோன்ஸ், "ஜீரோஸ் இங்க்' நிறுவன ஸ்டீம் கிளர்க் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று மேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமியிடம், "குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்' தொடர்பாக விளக்கினர்."திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சேகரமாகும், 1000 டன் குப்பையை சேகரித்து, அதிலிருந்து 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சாயக்கழிவு நீரை "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பது, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான இவ்விரு திட்டத்தை ஒன்றிணைத்து செயல்படுத்த 1,428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 90 சதவீதம் உலக வங்கி கடனாக வழங்குகிறது. மீதி, 10 சதவீத தொகையான 142 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மின்சாரம் தயாரிப் பதற்கான, குப்பையை மாநகராட்சி வழங்கவேண்டும். அதோடு, இத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இடத்தையும் வழங்க வேண்டும்,' என அக்குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, இடுவாய் கிராமத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந் தமான 30 ஏக்கர் நிலத்தை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜவஹர்லால், பொறியாளர்கள் உடன் சென்றனர். கோவில் வழி கிராமத்தில் உள்ள மாநகராட்சி உரத் தொழிற்சாலை இடத்தையும் ஆய்வுசெய்தனர்கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ""குப்பையிலிருந்த மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்குதேவையான, மாநகராட்சிக்கு சொந் தமான இடம்; தனியார் இடத்தையும் அக்குழுவினர் பார்வையிட்டனர். இத்திட்டம் தொடர்பாக, மாநகராட்சி அந்நிறுவனத்திடம் இதுவரை ஒப்பந்தம் ஏதும் போடவில்லை,''என்றார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:31
 

ஆயிரம் டன் குப்பையிலிருந்து 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்

Print PDF

தினமணி 06.01.2010.

ஆயிரம் டன் குப்பையிலிருந்து 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்

திருப்பூர், ஜன.5: திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கும் 1,000 டன் குப்பையில் இருந்து தினமும் 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க பல்கலை. பேராசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பெருகி வரும் மக்கள் தொகையை அடுத்து திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் குப்பைகள், கழிவுநீர், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தீர்வு காணமுடியாத தலைவலியாக இருந்து வருகின்றன.

இதற் கிடையில், அமெரிக்க நாட்டின் ஏஎல் பல்கலை. பேராசிரியர்கள் குழுவினர் குப்பைகள் இருந்து மின்சாரம் தயாரித்தல் குறித்து ஆய்வுகள் செய்துள்ளனர்.

இந்த ஆய்வைக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன், சார்லஸ் ஏலென் ஜோன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை திருப்பூர் மாநகராட்சி மற்றும் தொழில் துறையினருக்கு இத்திட்டம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கூட்ட அரங்கில் நடந்த இக்கருத்தரங்கில் மேயர் க.செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ஏ.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தொழில்துறையினர் பலர் பங்கேற்றனர். கருத்தரங்கைத் தொடர்ந்து ஆய்வுக்குழு பேராசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தினமும் 1000 டன் மெகாவாட் குப்பையைக் கொண்டு 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். தவிர, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போதே கழிவு நீரையும் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

திருப்பூரில் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதை இத்திட்டம் மூலம் மறுசுழற்சி செய்து 30 ஆயிரம் லிட்டர் கழிவுநீராக குறைத்து வெளியேற்றலாம்.

இதனால் மாநகரின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், குப்பை, மின்தட்டுப்பாடு மற்றும் சாக்கடை கழிவுநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நிரந்தரக் தீர்வு கிடைக்கும். இத்திட்டத்தை திருப்பூரில் செயல்படுத்த ரூ.1,400 கோடி உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூரில் புதன், வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் ஆய்வைத் தொடர்ந்து இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்றார்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:05
 

திடக்கழிவுகளில் இருந்து தினமும் 30 மெகா வாட் மின் உற்பத்தி : புதிய திட்டம் குறித்து திருப்பூரில் செயல்விளக்கம்

Print PDF

தினமலர் 06.01.2010

திடக்கழிவுகளில் இருந்து தினமும் 30 மெகா வாட் மின் உற்பத்தி : புதிய திட்டம் குறித்து திருப்பூரில் செயல்விளக்கம்

திருப்பூர் : திருப்பூர் பகுதியில் சேகரமாகும் 1000 டன் திடக்கழிவுகளில் இருந்து தினமும் 30 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நேற்று நடந்தது.திருப்பூர் ஜவுளி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்த மாதிரி செயல்விளக்க கருத்தரங்கு, ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது; மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநகராட்சி சுற்றுப்பகுதிகளில் சேகரமாகும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல் மற்றும் சாயக்கழிவு நீரை மறுசுழற்சியில் சுத்திகரித்தல் குறித்தும் விளக்கப்பட்டது.அமெரிக்க டெக்ஸாஸ் ஏ.எம் பல்கலை பேராசிரியர்கள் சீனிவாசன், ஆலன் ஜோன்ஸ், "ஜீரோ இங்க்' நிறுவன ஸ்டீம் கிளர்க் ஆகியோர் அடங்கிய குழு இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இதனடிப்படையில், திருப்பூரின் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டம், உத்தேச மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு 87 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் தயாரிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

க்ஸாஸ் ஏ.எம் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் கூறியதாவது:

திட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும், அனைத்து வகையான திடக்கழிவுகள், பேப்பர்கள், மரக்கழிவு, கார் டயர்கள், பெட்ரோலிய கழிவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளையும் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு ஆயிரம் டன் குப்பைகள் இருந்தால், 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 87 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்.மாநகராட்சி, நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சிகள், மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் தினமும் 900 டன் அளவுக்கு குப்பைகள் சேகரமாகின்றன. பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி பகுதிகளிலும் சேகரித்தால், 1000 டன்னுக்கும் அதிகமாக கிடைக்கும். தற்போதைய திட்டப்படி, தினமும் 1,100 டன் கழிவுகள் தேவை. திருப்பூரில் இருந்து 25 கி.மீ., சுற்றளவுக்கு மின்வினியோகம் செய்யலாம்.எஞ்சியவற்றில் உரம், ஆக்ஸிஜன், கார்பன்- டை- ஆக்ஸைடு வாயுக்கள் உள்ளிட்டவையும் தயாரிக்க முடியும். திருப்பூர் பகுதியில் உள்ள 20 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, தினமும் 11 கோடி லிட்டர் அளவுக்கு சாயக்கழிவு நீர் வெளியேறுகிறது. மின்சாரம் தயாரிக்கும் போது, கழிவுநீரையும் 30 சதவீதம் என்ற தொடர் அடிப்படையில், சுத்திகரிப்பு செய்யலாம். இதனால், 11 கோடி லிட்டர் தண்ணீரில், 30 ஆயிரம் லிட்டர் மட்டுமே கழிவாக வெளியேறும். மீதி அனைத்தையும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும்.

திட்டத்தை துவக்க, 1,423 கோடி ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 90 சதவீதத்தை உலக வங்கியின் அங்கமான ஐ.எப்.சி.,யிடம் பெறலாம்; மீதி 10 சதவீதத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும். இத்திட்டத்துக்கு மாநகராட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.20 ஏக்கர் இடம் வழங்குவதோடு, தினமும் 1000 டன் அளவுக்கு கழிவுகளை வழங்குவதாகவும் கூறியுள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுடன், குப்பை பிரச்னை, சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு என, மூன்று வகையாக ஆதாயம் அடையலாம். திட்டத்தின் முதலீட்டு தொகையை, ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் திரும்ப பெறலாம். இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.செயல்விளக்க கூட்டத்தில், திருப்பூருக்கான திட்ட பொறுப்பாளர் பத்மநாபன், முயற்சி அமைப்பு சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 06 January 2010 06:46
 


Page 56 of 66