Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக் கழிவு மேலாண்மை: விழிப்புணர்வு அவசியம்

Print PDF

தினமணி 17.12.2009

திடக் கழிவு மேலாண்மை: விழிப்புணர்வு அவசியம்

கோவை, டிச.16: திடக் கழிவு மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை மத்திய கலால் ஆணையர் சி.ராஜேந்திரன் கூறினார்.

குப்பையில் இருந்து செல்வம் என்ற திட்டத்தை ராக் அமைப்பு துவங்கியது. இத் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ் விழாவின் சிறப்பு விருந்தினர் சி.ராஜேந்திரன் பேசியது:

சிங்கப்பூரின் மொத்த பரப்பளவு 600 கி.மீ. அந் நாட்டின் மக்கள்தொகை 35 லட்சம்.

இவ் வளவு குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்தாலும் கூட அனைத்து இடங்களையும் சுத்தமாக உள்ளன. பள்ளி பருவத்தில் இருந்தே மாணவ, மாணவியரிடம் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை அந் நாட்டு அரசு ஏற்படுத்துகிறது.

உற்பத்தியா கும் திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடிகளை சிங்கப்பூர் அரசு ஒதுக்கீடு செய்கிறது. சுற்றுச் சூழலை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் திடக் கழிவு மேலாண்மைக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். மேலும், சிங்கப்பூரில் குப்பைகள் கையாளப்படும் நவீன முறைகளை கற்று தெளிந்து, அவற்றை நம் நாட்டிலும் அமலாக்க வேண்டும்.

பொரு ளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போதுதான் வெளியேற்றப்படும் குப்பைகளின் எடையும் அதிகரிக்கிறது. வறுமையில் வாழ்வோரை காட்டிலும் பணக்காரர்கள்தான் அதிக குப்பைகளை வெளியேற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் வீட்டை குப்பைகளின்றி சுத்தமாக வைப்பதுபோல் தெருவையும் குப்பைகளில்லா இடமாக மாற்ற வேண்டும்.

திடக் கழிவு மேலாண்மை குறித்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்றார்.

ராக் அமைப்பு தலைவர் சி.ஆர். சுவாமிநாதன், துணைத் தலைவர் ரவிசெல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 17 December 2009 08:38
 

குப்பை மறுசுழற்சி திட்டம் என்ன ஆனது?

Print PDF

தினமணி 19.11.2009

குப்பை மறுசுழற்சி திட்டம் என்ன ஆனது?

புதுச்சேரி, நவ. 18: நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 50 கோடியில் குப்பை மறுசுழற்சி செய்யும் திட்டம் என்ன ஆனது என்று அரசிடம் எம்எல்ஏ விஸ்வநாதன் வினா எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை கூறியது: புதுச்சேரி காங்கிரஸ் அரசு, சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் புதுச்சேரியைச் சிங்கப்பூராக மாற்றுவோம் என்று கூறினர். ஆனால் புதுச்சேரியில் இன்று மலைபோல் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் அரசுதான் பதில் கூற வேண்டும்.

புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி மூலம் தினசரி 450 டன் குப்பை சேகரமாகிறது. குப்பையை மறுசுழற்சி முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்திட அமைச்சர்கள் ஹைதராபாத், அமெரிக்கா போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர். ஆனால் இத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

நான் அமைச்சராக இருந்தபோது சேதராப்பட்டு கரசூரில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினேன். இதன் மூலம் ரூ.10 என்ற விலையில் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்தோம். இத் திட்டத்தைப் பாராட்டி அப்போதைய வேளாண் அமைச்சர் ரூ. 20 லட்சம் வழங்கினார். இத் திட்டம் இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை விரிவுபடுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் குப்பைகள் மறுசுழற்சி செய்ய ரூ.50 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. இத் திட்டம் என்ன ஆனது? லாஸ்பேட்டையில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டிலும் விமான நிலைய அதிகாரிகள்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குரும்பாபட்டில் குப்பை கொட்ட இடம் இல்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மீதான தடையைத் தடுத்தவர்கள் யார்? பிளாஸ்டிக் பொருள்களால் இன்று வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம் வந்து விட்டதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி கூறினார். அது தவறு என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கும் நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

Last Updated on Thursday, 19 November 2009 07:46
 

திடக் கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்த கவுன்சிலர்கள் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 18.11.2009

 


Page 57 of 66