தினமணி 18.11.2009
பத்மநாபபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் பிரிக்கும் பணி தொடக்கம்
தக்கலை, நவ. 17: பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் குப்பையில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களைப் பிரித்தெடுக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர் செல்லமுத்து, சுகாதார அலுவலர் கிருஷ்ணன், பொறியாளர் சனல்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், சிவகுமார் மற்றும் மில்டன், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கழிவுப் பொருள்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் பொருள்கள் மக்காத குப்பையாக பல்வேறு இடங்களில் தேங்கி சுகாதாரக் கேட்டையும், நோய்களையும் உருவாக்கி வருகிறது.
எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை வீடுகளில் பயன்படுத்தும்போது பிரித்து வைக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும்வகையில் மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ரேவன்கில்.