திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் ஆய்வு
கும்பகோணம்: கும்பகோணம்அருகே தாராசுரம் டவுன் பஞ்.,ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கினை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மண்டல டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் விஸ்வநாதன் தாராசுரம் டவுன் பஞ்.,ல் ஆய்வு மேற்கொண்டார். அது சமயம் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் உரக்கிடங்கு மற்றும் உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரக்கிடங்கு மேலும் சிறப்பாக செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், 18.25லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்னியம்மன் கோவில் குளம் தூர் வாருவதை பார்வையிட்டார். நபார்டு திட்டத்தின் கீழ் 12.50லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார வளாக கட்டிடத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். குளம் மேம்பாட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஒப்பந்தக்காரர் நாகராஜனுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, தாராசுரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் மோகன்தாஸ், இளநிலை பொறியாளர் வெங்கடேசன், பணி ஆய்வாளர் ஆனந்தக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.