Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க... திட்டம் கோபி நகராட்சிக்கு ரூ.35 லட்சம் மானியம்

Print PDF
தினமலர்          30.04.2013

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க... திட்டம் கோபி நகராட்சிக்கு ரூ.35 லட்சம் மானியம்

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சியில் மக்கும் குப்பைகள், அழுகிய காய்கறிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக பயன்படுத்தாத நிலையில், மாதம் ஆறு லட்சம் டன் குப்பை கழிவுகள் எவ்வித மறு சுழற்சியும் செய்யப்படாமல், வீணாகும் நிலை ஏற்பட்டது.

கிராமப்புற பஞ்சாயத்துகளில் தினமும் வெளியாகும் குப்பையில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாக தரம் பிரிக்கப்பட்டு, உரக்குழிகள் மூலம், உரங்களாக தயாரிக்கப்பட வேண்டும், என பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் கோபி நகராட்சி உள்பட, 27 நகராட்சிகள் செயல்படுத்தப்படும், என அரசு அறிவித்துள்ளது.கோபி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில் மட்டும் தினமும், மூன்றரை டன் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதுவரை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வீணாகியது. மக்கும் குப்பை கழிவுகளில் இருந்து கோபி நகராட்சி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தை செயல்படுத்த ஐந்து சென்ட் நிலம் போதுமானது. திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், நகராட்சி பகுதியில் உள்ள தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்த, கோபி நகராட்சிக்கு, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நகராட்சி பங்களிப்பு ஐந்து லட்சம் ரூபாய், அரசின் மானியம், 35 லட்சம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.குப்பைகள் அதிகரிக்கும் நிலையில், நகராட்சிக்கான மானிய தொகை வேறுபடும்.

நகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பை, காய்கறி, இறைச்சி கழிவுகள், ஓட்டல் மூலம் கொட்டப்படும் கழிவுகள் அப்புறப்படுத்தாமல், சாலை ஓரங்களில் தேங்கி கிடப்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட வழி வகுத்தது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்படுவதன், மூலம் இக்குப்பை கழிவுகள் தேங்காமல் சுற்று சூழல் பேணி காக்க முடியும்.மின் உற்பத்தி மற்றும் பயன்பாடு மூலம், நகராட்சிக்கும் வருவாய் உயர்ந்து, செலவு குறையும். குப்பையும் தேவையின்றி தேங்குவது தவிர்க்கப்படும்.
 

கோபி நகராட்சி திட்டம் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஷ்40 லட்சம் ஒதுக்கீடு

Print PDF
தினகரன்        27.04.2013

கோபி நகராட்சி திட்டம் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஷ்40 லட்சம் ஒதுக்கீடு


கோபி: கோபி நகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த  திட்டம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக பயன்படுத்தப்படாத நிலையில் ஒவ்வொரு மாதமும் 6 லட்சம் டன் குப்பைகள், கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படாமல் வீணாகி வருவதுடன் சுற்றுப்புற சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. தற்போது கிராமப்புற ஊராட்சிகளில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று இருவகையாக தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. பின்னர் உரக்குழிகளில் அந்த குப்பைகள் கொட்டப்பட்டு உரமாக தயாரிக்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகள், கழிவுகள், அழுகிய காய்கறி பழங்கள், உணவு பொருட்கள் இறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் சாலை ஓரங்களிலும், சாக்கடைகளிலும், நீர் நிலைகளிலும் கொட்டப்படுவதால் நகர் பகுதி முழுவதும் பெரும் சுகாரதா கேடு ஏற்பட்டு பல்வேறு நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தமிழகத்தில் பல நகராட்சிகள் சேர்க்கப்பட்டு தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து பயோ காஸ் எனப்படும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் கோபி உட்பட 27 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் நாளொன்றுக்கு மக்கும் குப்பைகள் மட்டும் 3.6 டன் அளவிற்கு சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு நகராட்சி குப்பை கிடங்கில் பயோ காஸ் பிளான்ட் அமைக்கப்பட உள்ளது. 2500 சதுர அடி பரப்பளவில் துவக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், தினசரி மார்க்கெட்டில் வீணாகும் அழுகிய காய்கறி மற்றும் பழங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் வீணாகும் உணவு பொருட்கள், இறைச்சி கழிவுகள் போன்றவையே பயோ காஸ் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருட்கள் ஆகும்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பயோ காஸ் தெருவிளக்கிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த கோபி நகராட்சிக்கு தமிழக அரசு 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் நகராட்சியின் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாயும் மீதமுள்ள தொகையை அரசு மானியமாகவும் வழங்க உள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும் போது கோபி நகராட்சியில் குப்பைகள் கொட்ட போதிய இடம் இல்லாததால் பல வார்டுகளில் பல நாட்கள் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்து வந்த நிலை மாறி உடனுக்குடன் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். இதனால் குப்பைகளால் ஏற்பட்டு வந்த சுகாதார கேடு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் எனவும் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதை பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களில் கிடப்பில் போடப்பட்டிருப்பது போன்று அரசின் மானியத்திற்காக மட்டும் பெயரளவில் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கோபி நகராட்சி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

புனேயை போல் கோவையில் குப்பையில் இருந்து மின்உற்பத்தி திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF
தினத்தந்தி        18.04.2013

புனேயை போல் கோவையில் குப்பையில் இருந்து மின்உற்பத்தி திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்


புனே நகரை போல், கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

புனேயில் ஆய்வு


கோவை மாநகராட்சி கமிஷனர் லதா, புனே மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கு ம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:–

புனேயில் 700 மெட்ரிக் டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அங்கு சிறப்பான பலனை அளிக்கிறது.

மின்உற்பத்தி திட்டம்

கோவையில் தினமும் 750 டன்னுக்கும் மேலாக குப்பை மற்றும் கழிவுகள் சேருகிறது. இதில் 450 டன் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. பெரும்பாலான குப்பைகளை தளம் அமைத்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புனேயில் 15–க்கும் மேலான இடங்களில் 700 டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தனியார் நிறுவனம் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

புனேயை போல் கோவையிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படும். அரசின் ஒப்புதலை பெற்று இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்


ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் ஒண்டிப்புதூர் மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைக்காக பள்ளமான சாலைகளை சீரமைக்க ரூ.51 கோடி செலவில் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.
 


Page 27 of 66