Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எடப்பாடியில் புதிய குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமணி     12.05.2010

எடப்பாடியில் புதிய குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

எடப்பாடி. மே 11: எடப்பாடி நகராட்சி ஒட்டப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி நகராட்சி 1-வது வார்டு ஒட்டப்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, நகராட்சிப் பொது நிதியில் இருந்து குடிநீர்த் தொட்டி கட்ட நகராட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, அப்பகுதியில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி கட்டுமானப் பணிகள் முடிந்து, செவ்வாயக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.

நகராட்சித் தலைவர் எம்.இருசப்பமேத்தா குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். நகர் மன்ற உறுப்பினர்கள் எம்.சீரங்கன், என்.சேகர், ஆர்.ராஜேந்திரன், சி.வடிவேல், சி.சாமியப்பன், இடைப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பி.காந்தி, நகராட்சி பொறியாளர் எம்.கார்த்திகேயன், கே.சின்னமணி, .செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.