தினமலர் 14.05.2010
கூட்டுக்குடிநீர் திட்டங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம்
தேனி : தேனி மாவட்டத்தில் பரவி வரும் வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்த கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள் ளது.
சின்னமனூர், உத்தமபாளையம், முத்தலாபுரம், அப்பிபட்டி, சின்னஓவுலாபுரம், உ.அம்மாபட்டி, ஆண்டிபட்டி பகுதிகளில் வயிற்றுப்போக்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தமபாளையம் பகுதியில் பெரியாற்றில் அமைந் துள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து சப்ளையாகும் குடிநீர் மூலம் வயிற்றுப் போக்கு பரவியது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதிகளில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் சப்ளை செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பம்பிங் கிணறுகள், தரையடி, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர் பம்பிங் கிணறுகளை சுற்றி நிற்கும் சாக்கடை கழிவுகளை அகற்றும் வகையில் பெரியாற்றில் இருந்து விநாடிக்கு 250 கனஅடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.