Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளை. யில் புதிய குடிநீர் திட்டப் பணி: மேயர் ஆய்வு

Print PDF

தினமணி    14.05.2010

பாளை. யில் புதிய குடிநீர் திட்டப் பணி: மேயர் ஆய்வு

திருநெல்வேலி,மே 13: பாளையங்கோட்டையில் ரூ.22.22 கோடியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் திட்டப் பணியை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

இம் மாநகராட்சியில் ரூ.22.22 கோடியில் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மேலப்பாளையம் மண்டலம் 19,26,27 வார்டுகள் பகுதியில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப் பணிகள் நடைபெறும் பெருமாள்புரம், கனரா வங்கி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, தமிழ்நகரில்,ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளுக்கு மேயர் அ.லெ.சுப்பிரமணியன் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் மாநகர பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற் பொறியாளர் வி. நாரயணன் நாயர், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன், உதவி செயற் பொறியாளர் து. கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பி.தியாகராஜன், பெ.பாண்டிக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.