தினமலர் 15.05.2010
திட்டக்குடியில் குடிநீர் பம்புகள் திறப்பு விழா
திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சியில் குடிநீர் கைப்பம்புகள் திறப்பு விழா நடந்தது.திட்டக்குடி பேரூராட்சியில் கோடை காலத்தையொட்டி குடிநீர் சீராக கிடைக்க கூடுதலாக கைப் பம்புகள் அமைக்கப்பட் டது. அதன்படி திட்டக்குடி நாளங்காடிதெரு, ஏ.எம்.கே.நகர், தர்மகுடிகாடு துணைமின் நிலையம் அருகில், இளமங்கலம் உட்பட ஏழு இடங்களில் தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கைப்பம்புகள் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று காலை திட்டக்குடியில் நடந்தது.பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமை தாங்கி, இயக்கி வைத்தார். துணை சேர்மன் கமலி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜோதிமாணிக்கம் வரவேற்றார். கவுன்சிலர்கள் சரவணன், ராஜேந்திரன், முத்துவேல், ராஜா அலெக் சாண்டர், உதவி பொறியாளர் பூமிநாதன், பதிவறை எழுத்தர் கிருஷ்ணமூர்த்தி, காண்ட்ராக்டர் தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.