Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வாரியம் அதிரடி முடிவு ஒரு பிளாட்டுக்கு ஒரு இணைப்புத்தான்

Print PDF

தினகரன் 20.05.2010

குடிநீர் வாரியம் அதிரடி முடிவு ஒரு பிளாட்டுக்கு ஒரு இணைப்புத்தான்

புதுடெல்லி, மே 20: நாளுக்குள் நாள் குடிநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் இனி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே தருவது என்று முடிவு செய்துள்ளது.

டெல்லியில் குடிநீர் தேவை தினமும் அதிகரித்து வருகிறது. இப்போதே குடிநீர் தேவை, இருப்பை விட அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு 1000 மில்லியன் காலன் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தன்னுடைய எல்லா ஆதார ங்களையும் பயன்படுத்தி குடிநீர் வாரியத்தால் 870 மில்லியன் காலன் நீரை மட்டுமே வாரியத்தால் சப்ளை செய்ய முடிகிறது.

இப்போதுள்ள தேவை யை முனக் கால்வாய் மூலம் வரும் நீரை பெற்று சமாளிக்கலாம் என்று குடிநீர் வாரியம் நம்பி இருந்தது. இதற்காக அரியானாவில் இருந்து டெல்லி வரையில் ரூ.550 கோடி செலவில் கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் அமைத்தது. ஆனால், டெல்லிக்கு உரிய பங்கை தராமல் அரியானால அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் இந்த குடிநீர் ஆதாரமும் பிரச்னையில் உள்ளது.

இந்நிலையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம் இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருவது குடிநீர் வாரியத்துக்கு கடும் எரிச்சலை கிளப்பியுள்ளது. துவர்காவில் துணை நகரத்தை ஆணையம் கட்டி வருகிறது. இதற்கான குடிநீர் ஆதாரத்தை பொறுப்பேற்று கொள்வதற்கு இந்த இரு அரசு அமைப்புகளுமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் ஆதாரம் இல்லாத நிலையில், குடிநீர் இணைப்புகளை கட்டுப்படுத்துவது என்று வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் ரமேஷ் நெகி கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது குடிநீர் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் வாரியம் உள்ளது. இதனால் இனிமேல் 4 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே வழங்கப்படும். பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக உபயோகிக்க முன்வரவேண்டும்.

டெல்லி மேம்பாட்டு நிறுவனம் சமூக பொறுப்பு இல்லாமல் தனியார் கட்டிட நிறுவனங்களை போன்று அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது.

குடிநீர் ஆதாரம் பற்றி ஆணையம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இனியும் தொடர்ந்து இதேநிலையை ஆணையம் தொடர்ந்தால், அதன்பின் எல்லா குடிநீர் திட்டத்துக்கும் உரிய செலவை ஆணையத்துடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வது குறித்து குடிநீர் வாரியம் முடிவெடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.