தினகரன் 20.05.2010
வீடு, வீடாக ஆய்வு
சின்னமனூர், மே 20: சின்னமனூர் நகராட்சியில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் குறித்து நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்ததே இதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் நடக்கிறதா என சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சின்னமனூர் நகரில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி கூத்தபெருமாள் தலைமையில், நகராட்சி ஆணையர் பக்கிரிசாமி, பொறியாளர் செல்வராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று வீடு, வீடாகச் சென்று குடிநீர் பரிசோதனையில் ஈடுபட்டனர். குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் குளோரின் அளவு சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது