தினமணி 21.05.2010
பில்லூர் குழாயில் உடைப்பு: சீரமைக்கும் பணி தீவிரம்
கோவை, மே 20: பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பில்லூரில் இருந்து கோவைக்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் கரட்டுமேடு பகுதியில் வியாழக்கிழமை மதியம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி குடிநீர்ப் பிரிவு உதவிப் பொறியாளர் கருப்பசாமி தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்றனர்.
உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப் பணி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே,வெள்ளிக்கிழமை இரவு முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.