Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் ஒட்டன்சத்திரம் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர்   25.05.2010

குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் ஒட்டன்சத்திரம் கூட்டத்தில் முடிவு

ஒட்டன்சத்திரம் : குடிநீர் பிரச்னைக்கு முக் கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

ஒட்டன்சத்திரம் சிறப்புநிலை பேரூராட்சிக் கூட் டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைதலைவர் வனிதா முன்னிலை வகித் தார். செயல் அலுவலர் ஜெயக்கொடி வரவேற் றார். அரசு கொறடா சக்கரபாணி சிறப்பு அழை ப்பாளராக பங்கேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை போக்க பழுதான பொதுக்குழாய்களை தேவைக்கேற்ப நீட்டிப்பு செய்யவும், விரிவாக்க பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய புதிய தெருக்குழாய்கள் அமைத்தல், சில இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், வார்டுகள் தோறும் தேவைப்படும் இடங்களில், புதிய தெருவிளக்குகள் அமைத்தல், வடிகால் வசதிகள் செய் தல், தார்ரோடு அமைத் தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.