Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் குடிநீர் பாதிப்பு: நாளை முதல் சீராகும்

Print PDF

தினமணி    28.05.2010

பில்லூர் குடிநீர் பாதிப்பு: நாளை முதல் சீராகும்

கோவை, மே 27: சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் பில்லூர் குடிநீர் விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்படும். சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம சீராகும்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பில்லூர் பராமரிப்பு கோட்ட செயற்பொறியாளர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சாலைவிரிவாக்கப் பணி, பூமிக்கு அடியில் மின்கம்பி புதைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருவதால், பில்லூர் கூட்டுக்குடிநீர் விநியோக பிரதானக் குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணி வியாழக்கிழை நடைபெற்றது. இப்பணி வெள்ளி கிழமையும் தொடரும். சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராகும்.

எனவே, பில்லூர் குடிநீர்த் திட்ட பகுதிகளான சூலூர், சுல்தான்பேட்டை, பல்லடம், பொங்கலூர், மதுக்கரை ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளும், மக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.