Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ .1.66 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி துவக்கம்கீழக்கரை நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்    31.05.2010

ரூ .1.66 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி துவக்கம்கீழக்கரை நகராட்சி தலைவர் தகவல்

கீழக்கரை: கீழக்கரையில் 1.66 கோடி ரூபாய் மதிப்பீட்டி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக நகராட்சி தலைவர்ர் பஷீர் அகமது கூறினார். அவர் கூறியதாவது:

கீழக்கரையில் 38 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது.இந்த குழாய்களில் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது ஒப்புதலின் படி மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.

பழைய குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு, தரம் வாய்ந்த புதிய குழாய்கள் பொருத்தப் படுவதுடன், 10 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை தொட்டியும் கட்டப்படும்.கீழக்கரை மக்களுக்கும் காவிரி நீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்புக்கு 5ஆயிரம்,வர்த்தக நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும், என்றார். நகராட்சி ஆணையாளர் சுந்தரம் உடன் இருந்தார்.