Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 31.05.2010

கரூர் நகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

கரூர், மே 31: கரூர் நகராட்சிக்கு ரூ.30கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவி சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் காவிரி கூடுதல் குடிநீர் ரூ.1.34 கோடி மதிப் பில் நிறைவேற்றப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, நெரூரில் இருந்து கரூர் நகரம் வரை கூடுதல் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் ரூ.30 கோடியில் செயல்படுத்த நிர்வாக அனு மதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நகராட்சியில் செயல்பட உள்ளதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். எனவே, தற்போதுள்ள குடிநீர் உபவிதிப்படி குடிநீர் கட்டணத்தை உயர்வு செய்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குடிநீர் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என அதிமுக உறுப்பினர் முத்து சாமி கூற, புதிய திட்டம் என்று அமலுக்கு வந்து குடி நீர் விநியோகிக்கப்படுகி றதோ அப்போதுதான் வரி உயர்வு அமலுக்கு வரும். தற்போது எந்த உயர்வும் இல்லை என கவுன்சிலர் மணிராஜ் கூறினார். மேலும் அவர் கூறுகை யில், 13ஆண்டுகளுக்கு முன் னர் ஆக்டோபஸ் வெல் அமைக்கப்பட்டு தற்போ தைய குடிநீர் திட்டம் செயல்படுகிறது.

Last Updated on Monday, 31 May 2010 11:28