தினமலர் 01.06.2010
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் கூறியதாவது: கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் கொள்ளிடத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், வரும் தண்ணீரை அனைவருக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் குடிநீரை திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தண்ணீரை பொதுமக்கள் வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். கொதித்த நீரை குளிரவைத்து குடிப்பதால் நோய் பரவாமல் தடுக்க முடியும். விடுதியில் தங்கி உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொதித்த நீரை வழங்க தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.