Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர்

Print PDF

தினமணி     01.06.2010

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர்

தஞ்சாவூர், மே 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: மாவட்டம் முழுவதும் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு 04362-236258 எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் (ஞாயிற்றுக்கிழமைத் தவிர). புகார்களை பதிவேட்டில் பதியப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன் ùபுறலாம் என்றார்.

Last Updated on Tuesday, 01 June 2010 08:41