Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.3.25 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 01.06.2010

ரூ.3.25 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி

புதுச்சேரி, மே 31: உருவையாறு அன்பு நகரில் குடிநீர் வசதிக்காக ரூ.3.25 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் போடும் பணியை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான க.நடராஜன் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர் எம்எல்ஏ ஜெ.நாராயணசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர் ப.சரஸ்வதி பழனி, கிராம பஞ்சாயத்து தலைவர் கே.நாகமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெ.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்