Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர் 02.06.2010

குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் வழங்குவதை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். கலெக்டர் அலுவகம் பனகல் கட்டிடத்தில் உள்ள உதவி இயக்குனர் (பஞ்சாயத்துக்கள்) அலுவலகத்தில் குடிநீர் விநியோகம் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண் 04362 236258 என்ற எண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற அனைத்து நாட்களிலும் புகார் தெரிவிக்கலாம். குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்கள் பதிவேட்டில் பதியப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் மூலம் தெரிவித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.