Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர் குழாய் அமைப்பு: பொதுப்பணித்துறைக்கு நன்றி

Print PDF

தினமணி 03.06.2010

புதிய குடிநீர் குழாய் அமைப்பு: பொதுப்பணித்துறைக்கு நன்றி

புதுச்சேரி, ஜூன் 2: புதுச்சேரியில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டதற்காக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவுக்கு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்துள்ளார்.

÷அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: புதுவை உருளையன்பேட்டை, திருவள்ளுவர் நகரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு 40 ஆண்டுகால பழைய குடிநீர் இணைப்பு குழாய்கள் இருந்தன. இதனால் குடிநீர் நிறம் மாறி, அசுத்தமான குடிநீர் வீடுகளுக்கு வந்தது.

÷இது குறித்து பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தேன். சிறப்பு கூறு நிதி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக இப்பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறியிருந்தேன்.

÷புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவினர் புதிய குடிநீர் குழாய்களை பொருத்தியுள்ளனர். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.