தினகரன் 03.06.2010
நீர் ஆதாரம் குறைவு பொதுமக்களுக்கு நகராட்சி அறிவுரை குடிநீர் சிக்கனம்
மயிலாடுதுறை, ஜூன் 3: நீர் ஆதாரம் குறைவாக இருப்பதால் மயிலாடுதுறை நகரில் உள்ள மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண் டுமென நகராட்சி ஆணை யர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தற்போது கோடை கால மாக இருப்பதால் கொள் ளிடம் ஆற்றில் நீர் ஆதாரம் குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும். குடிநீரை வேறு உபயோகத் திற்கு பயன்படுத்த வேண்டாம்.
குடிநீர் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க காய்ச்சிய குடிநீரையே பருகவும். நகரா ட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு விடுதிகள், டீக்கடை, டிபன் கடைகள், கல்வி நிலையங்கள், பள்ளி மற் றும் கல்லூரி மாணவர் விடுதிகளிலும் காய்ச்சிய குடி நீரையே கட்டாயம் வழ ங்க வேண்டும். பொதுமக்கள் நகரில் ஆங்காங்கே குப்பை கொட்டுவதாலும் கழிவுநீரை சாலைகளில், குளங்களில் விடுவதாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் மட்டும் குப்பைகளை கொட்டவும். இவ்வாறு ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார்.