Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணி நீர் மட்டம் சரிவு 10 நாள் வரை சமாளிக்கலாம்

Print PDF

தினகரன் 04.06.2010

சிறுவாணி நீர் மட்டம் சரிவு 10 நாள் வரை சமாளிக்கலாம்

கோவை, ஜூன் 4:சிறுவாணி அணையின் நீர் மட்டம், கடைசி கட்டத்தை எட்டி விட்டது. இன்னம் 4 மீட்டர் மட்டுமே குடிநீர் பெறமுடியும். நீரேற்று நிலையத்திற்கு, அணையின் இதர பகுதியிலிருந்து சிறு வாய்க் கால் அளவிற்கு மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே தடையின்றி குடிநீர் பெறமுடியும். நீரேற்று நிலையத்தின் வால்வு பகுதியில் நீரை திருப்பி விட்டால் தான், கூடுதலாக ஒரு வாரத்திற்கு குடிநீர் பெற முடியும். 20ம் தேதி வரை சமாளிக்க முடியும். கூடுதலாக குடிநீர் எடுத்தால், அதாவது தினமும் 8 கோடி லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுத்தால், 15ம் தேதி வரை மட்டுமே குடிநீர் பெற முடியும்.

குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், "வரும் 10ம் தேதி பருவ மழை துவங்கி விடும். அணை வறண்டு போக வாய்ப்பில்லை. கடந்த ஆண்டும் இதே நிலை தான் இருந்தது. விரைவில் மழை பெய்து அணை நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்," என தெரிவித்தனர்.