Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அன்னவாசல் பேரூராட்சியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணி தீவிரம்

Print PDF

தினகரன் 08.06.2010

அன்னவாசல் பேரூராட்சியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணி தீவிரம்

அன்னவாசல், ஜூன் 8: அன்னவாசல் பேரூராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அன்னவாசல் ஒன்றியத்தில் அன்னவாசல் பேரூராட்சி உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேட்டுத்தெருவில் 3லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அன்னவாசல் நகரில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர், துணை முதல்வர், கலெக்டர், குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பேரூராட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தமிழக அரசு பார்வையிட்டு ஒரு லட்சத்து 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் பணிகளை தொடங்கியது. ரூ.27லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

3லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய குடிநீர்தொட்டி கட்டிய பிறகு அன்னவாசல் பொதுமக்களின் குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என பேரூராட்சி தலைவர் பிரபா தெரிவித்தார்.