Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் கொடுங்கமும்பை பெண் மேயர் சொல்கிறார்

Print PDF

தினகரன் 09.06.2010

விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் கொடுங்கமும்பை பெண் மேயர் சொல்கிறார்

மும்பை, ஜூன் 9: ‘வரும் விருந்தினர்களுக்கு ஒரு டம்ளருக்கு பதில் அரை டம்ளர் தண்ணீர் கொடுங்க போதும்

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, இப்படி ஒரு அருமையான யோசனை கூறியிருப்பவர் மும்பை பெண் மேயர்.

சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, ஞாயிறன்று, மேயர் ஷ்ரதா யாதவ், தண்ணீர் சேமிப்புக்கு பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார். பள்ளி, கல்லூரிகளில், தண்ணீரை சேமிக்கும் விளம்பர கட்அவுட்கள் வைக்க உத்தரவிட்டார்.

தன்னை பார்க்க வரும் விருந்தினர்களுக்கு முழு டம்ளர் தண்ணீர் வைப்பதை தவிர்த்து, அரை டம்ளர் தண்ணீர் வைக்கும்படி உத்தரவிட்டார். விருந்துகள் நடத்தும் ஓட்டல்களுக்கும் இப்படி ஒரு நூதன ஆர்டரை அவர் போட்டார். அதை பிரபல ஓட்டல்களும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டன.பொது மக்களையும் இப்படி கடைபிடிக்க கேட்டுக்கொண்டார். இப்படி புதுமையான முறையில் குடிநீர் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தும் மேயர், சமீபத்தில் ஒரு சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார்.

மண்டல வாரியாக ஒரு வாரம் முழுக்க தண்ணீர் சப்ளை நிறுத்தம் செய்யலாம் என்று யோசனை தெரிவித்து அமல்படுத்த ஆரம்பித்தார். மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் வேறு வழியில்லாமல் அதை வாபஸ் பெற்றார்.