தினகரன் 14.06.2010
ரூ.293 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் ஒரு நபருக்கு நாள்தோறும் 135லிட்டர் குடிநீர் விநியோகம் வேளாண் அமைச்சர் தகவல்சேலம்
, ஜூன் 14: சேலம் மாநகராட்சி சின்னதிருப்பதியில் இலவச கலர் டிவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்
(பொ) கலையரசி தலைமை வகித்தார். வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு 1647 பேருக்கு ரூ.38.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:சின்னதிருப்பதியில்
4,264 பேருக்கு இலவச கலர் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறைகள், ரூ.3 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் ஆகியன திறந்து வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. இன்னும் 44 லட்சத்து 63 ஆயிரத்து 428 குடும்பங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வழங்கப்பட்டு விடும்.சேலம் மாநகராட்சியில் ரூ
.188.48 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க சர்வே செய்யப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.20 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிக்கு மட்டும் ரூ.293 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்பட்டதும் மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தினசரி 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இவ்வாறு வேளாண் அமைச்சர் பேசினார்.நிகழ்ச்சியில் மேயர் ரேகாபிரியதர்ஷினி
, ஆணையர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலு, தனித்துணைஆட்சியர் மோகனராஜ், மண்டலக்குழுத்தலைவர் நடேசன், வட்டாட்சியர் சித்ரா, கவுன்சிலர் சாரதாதேவி, வட்டாட்சியர் மணிமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.