தினமணி 15.06.2010
குடிநீர்த் திட்டத்துக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடுபழனி
, ஜூன் 14: பழனியில் குடிநீர் மேம்பாட்டுக்காக மாநிலங்களவை எம்.பி.யான இயற்கை விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.பழனி நகரில்
25,26 மற்றும் 9-வது வார்டுகளில் கோடைக் காலங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில்
, ராஜா நகரில் சுமார் இரண்டு லட்சம் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி ரூ. 17 லட்சம் செலவில் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிட்டது.ஆனால்
, அதற்கான நிதி கிடைக்காததால் நீண்ட நாள்களாக திட்டம் தாமதமானது.இந்நிலையில்
, இதுகுறித்து தமிழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, பழனி நகர்மன்றத் தலைவரும், 26-வது வார்டு உறுப்பினருமான இராஜமாணிக்கம், 25-வது வார்டு உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடிதம் அனுப்பினர். கவுன்சிலர் கந்தசாமி எம்.எஸ். சுவாமிநாதனை நேரில் சந்தித்து நிலைமை குறித்து விளக்கினார்.இதையடுத்து
, பழனி குடிநீர் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி எம்.எஸ். சுவாமிநாதன் கடிதம் கொடுத்துள்ளார்.இக்கடிதம் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கடந்த மே
28-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு வந்துள்ளது.பழனி நகரில் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய எம்
.எஸ்.சுவாமிநாதனுக்கு, நகர்மன்றத் தலைவர், கவுன்சிலர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.