தினகரன் 15.06.2010
பேரூராட்சி பணியாளர்கள் சங்க துவக்க விழா
உளுந்தூர்பேட்டை, ஜூன் 15: தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் துவக்க விழா உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. தங்கவேல் தலைமை தாங்கினார். பாலமுருகன் வரவேற்றார். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக தங்கவேல், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மயில்வாகணன், துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், ராஜேஷ், கலியமூர்த்தி, லட்சுமணன், சந்திரசேகர், லத்தீப், இணை செயலாளர்கள் விழிசெல்வன், மருதுபாண்டியன், பிரபு, ராஜீ, சரவணன், ஜாபர்கான் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், தேவநேசன், வைத்தியலிங்கம், மல்லிகா, உஷா, ரவி, சுகுமாறன், பாலசுப்ரமணியன், சட்ட ஆலோசகர் அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 20 சதவிகித பதவி உயர்வினை அமுலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆனந்த், ஜேம்ஸ், தமிழரசி, புவனேஸ்வரி, சாந்தி, செந்தில், ரங்கன், ராஜேந்திரன், சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.